ராஜஸ்தானில் இன்று இந்திய விமானப்படையின் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள பானுடா கிராமம் அருகே இன்று இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ரத்தன்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் சமநிலையற்றதாகத் […]

சென்னை எழும்பூர் காவல் ஆனையர் அலுவலகம் அருகே சரக்கு வாகனம் மோதி ஸ்கூட்டரில் வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் புதுப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்பவர் சம்பவ இடத்திலேயெ உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெண்ணை மோதிய சரக்கு வாகனம் குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்று சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்காமல் விசாரணை கைதிகள் சிறையில் இருப்பது இங்கு தான் நடக்கிறது.. சிறை என்றால் சிறை காவலர்கள் கைதிகளை பாதுகாக்க வேண்டும்.. வழக்கு இருக்கு நீதிமன்றம் உள்ளது.. நாங்கள் குற்றவாளியா, நிரபராதியா என்பதை […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. பேஸ்புக் என்பது தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல, மக்கள் அதன் மூலம் தங்கள் வேலை, வணிகம் மற்றும் அடையாளத்தையும் மேம்படுத்துகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், உங்களுக்குத் தெரியாமல் யாராவது உங்கள் பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தினால், உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும். சில எளிய வழிமுறைகள் மூலம், உங்கள் பேஸ்புக் கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதை […]

ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]

மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது “ உங்களை போன்ற இளம் மாணவர்களை சந்திக்கும் போது எனக்கு எனர்ஜி வந்துவிடுகிறது. மாணவர்கள் அதிகமாக இருக்கும் நிகழ்ச்சி என்றால் உடனே ஓ.கே சொல்லிவிடுவேன்.. இந்த ஜமால் முகமது கல்லூரிக்கு நான் வருவது இது முதன்முறை அல்ல.. […]

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையான பராமரிபின்றி இயங்கி வந்த காற்றாஅலை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக் கூடிய சாலையில் சீல நாயக்கன்பட்டி பகுதியில் தனியார் நிறுவத்தின் காற்றாலை இயந்திரம் ஒன்று உள்ளது. 3 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த காற்றாலை இயந்திரம் இன்று காலை காற்றின் வேகம் காரணமாக அடியோடு சாய்ந்தது. காற்றாலை உடைந்து 6 துண்டுகளாக சிதறியதால் அருகே […]

மும்பையில் உள்ள MLA விருந்தினர் மாளிகையில் ஒரு கேன்டீன் ஊழியரை சிவசேனா (ஷிண்டே பிரிவு) சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் மூலம் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளார்.. புல்தானா தொகுதி MLA சஞ்சய் கெய்க்வாட், விருந்தினர் மாளிகை கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரத்தில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.. இதனால் அந்த கேண்டீன் ஊழியரை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் மோசமாக இருந்ததாகவும், அவர் ஊழியர்களை கடுமையாக சாடியதாகவும், […]