நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து இண்டிகோ இந்தூர்-ராய்ப்பூர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக மீண்டும் இந்தூரில் தரையிறங்கியது.. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறான எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதை அடுத்து இது நடந்தது. இந்தூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6:50 மணியளவில் திரும்ப வேண்டிய கட்டாயம் […]

அஜித் குமார் வழக்கில் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த […]

வங்கி, அஞ்சல், காப்பீடு மற்றும் கட்டுமானம் போன்ற பொதுத்துறைகளில் பணியாற்றுபவர்கள் உட்பட 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பாரத் பந்த் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து சேவைகளிலும் இடையூறுகள் ஏற்படக்கூடும். பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான தொழிலாளர்கள் “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத மற்றும் தேச விரோத கார்ப்பரேட் சார்பு கொள்கைகளை” எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.. 10 […]

கென்யாவின் நைரோபி நகரம் உள்பட பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாகத் தொடரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள், இப்போது தீவிரமான வன்முறைகளில் முடிந்துள்ளன. ஜூலை 7 ஆம் தேதி அந்த நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வான “சப சபா” போராட்ட நினைவு நாளில் பெரும்பான்மையிலான இளைஞர்கள் சாலைகளில் குவிந்தனர். ஜனநாயக அரசியல் கோரிக்கைகளுடன் கூடிய இந்த மக்கள் எழுச்சியை கலைப்பதற்காக, கென்யா காவல் துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைக் […]

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை AAIB சமர்ப்பித்துள்ளது.. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி வளாகத்தில் மோதியதில், விமானத்தில் இருந்த 241 பேரும் தரையில் இருந்த பலர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார். […]

பொருளாதார ரீதியாக பின்தங்கிய அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) திட்டம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 2019 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம், வயதான தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்குவதாகும். இந்த திட்டத்தின் மூலம், குறைந்த வருமானம் உள்ளவர்கள் வயதான காலத்தில் ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டத்திற்கு யார் தகுதியானவர்? இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், […]

இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேர்வதால், அவர்களால் உற்சாகமாக இருக்க முடியாது. அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிய முடியாது. எந்த செயலை செய்தாலும் விரைவாக சோர்வடைவார்கள். இருப்பினும், சில நல்ல பழக்கவழக்கங்களுடன், தொப்பை கொழுப்பைக் குறைக்கலாம். நாம் தினமும் குடிக்கும் பழச்சாறுகள், சோடாக்கள், தேநீர், காபி போன்ற சில பானங்களில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை உடலில் கொழுப்பாக மாறி வயிற்றை வளரச் செய்கிறது. எனவே நீங்கள் பழச்சாறுகளை குடிக்க […]