மூத்த குடிமக்களுக்கான இலவச ஆன்மிக பயணம் ஜூலை 18-ம் தேதி தொடக்க உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டு மூத்த குடிமக்களுக்கு (Senior Citizen) தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் பிரபலமான அம்மன் கோவில்களுக்கு அரசே உங்களை இலவசமாக அழைத்துச் செல்ல உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களை ஆடி மாத அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மிக பயணம், ஜூலை […]

இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் என பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீர் தகராறைத் தீர்க்கவும், சிந்து நதிப் படுகையின் ஆறு முக்கிய நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்ளவும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960 இல் கையெழுத்தானது. ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, […]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே செங்கிலிகுப்பம் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பழுதடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், 10ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கிலிகுப்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி சரிதா, 16 வயது மகன் வெற்றிமாறனை வளர்த்து வந்தார். ஆம்பூர் பகுதியிலுள்ள அரசு […]

2026 தேர்தலையொட்டி, திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நேற்று இரவு திமுகவில் கல்வியாளர் அணி, மாற்றுத் திறனாளிகள் அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பரப்புரையின் போது திமுக கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் கல்வியாளர் அணியின் தலைவராக புகழ்பெற்ற பேச்சாளர் புலவர் ந.செந்தலை கவுதமன் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 1ஆம் தேதி மதுரையில் […]

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 27.06.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம் 2008-ல் அமைக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற […]

அரசின் முறையான அனுமதி இல்லாமல் வீடுகளை வழிபாட்டு கூடங்களாக (prayer halls) மாற்றி பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டம் கோடவாசல் பகுதியைச் சேர்ந்த ஆயர் எல். ஜோசப் வில்சன் என்பவர், 2024-ஆம் ஆண்டு, தம்முடைய வீட்டில் ஜெபக் கூட்டங்கள் நடத்துவதை தடுக்கும் வகையில் அந்த வீட்டின் மீது மாவட்ட தாசில்தார் சீல் வைக்க உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனுவை […]

சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கும் முன்பாக வரும் ஜூலை 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை மாளிகைபுரம் கோயிலின் இடது புறத்தில் அமைந்திருந்த நவக்கிரக மண்டபத்தை மற்றொரு இடத்தில் மாற்ற வேண்டும் என தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய நவக்கிரக கோயில் ஒரு தனி இடத்தில் கட்டப்படத் தொடங்கியது. தற்போது அதன் கட்டுமானம் நிறைவடைந்து, பிரதிஷ்டை நிகழ்வுக்கான ஏற்பாடுகள் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான்-இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அறிவித்துள்ள நிலையில், முதலில் நீங்கள் நிறுத்துங்கள், பின்னர் போர் நிறுத்தம் குறித்து யோசிக்கலாம் என்று ஈரான் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பு குறித்து ஈரான் அல்லது இஸ்ரேலிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ […]

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக, மத்திய கிழக்கு பகுதிகளில் வான்வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின. ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது […]

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் இடது கை சுழற்பந்து வீச்சாளருமான திலீப் தோஷி மாரடைப்பால் காலமானார். இவருக்கு பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். திலீப் தோஷி நேற்று (திங்கள்) லண்டனில் காலமானார். அவருக்கு வயது 77. பல தசாப்தங்களாக லண்டனில் வசித்து வந்த திலீப் தோஷி, மாரடைப்பால் இறந்தார். அவரது மரணச் செய்தி கிரிக்கெட் […]