மத்திய பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடங்களுக்கான 13-வது கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். மத்திய பணியாளர் தேர்வாணையம் “காலி பணியிடங்கள் 2025”-க்கான 13-வது கட்ட தேர்வு குறித்த அறிவிப்பை 02.06.2025-ம் தேதி வெளியிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள மத்திய அரசின் அமைச்சகங்கள்,துறைகள், அமைப்புகளால் அறிவிக்கப்படும் பல்வேறு காலி பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை வெளிப்படையான முறையில் […]
மழை, வெள்ளம் வந்தாலும் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை தொடரும் என்றும் நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு புதிய சத்தீஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இணையுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார். சத்தீஸ்கரில் உள்ள நவ ராய்ப்பூர் அடல் நகரில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக (NFSU) வளாகம் மற்றும் மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மழைக்காலத்தின் ஒவ்வொரு முறையும், […]
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மறுபாடு காரணமாக இன்று முதல் 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், நமது பெரும்பாலான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தரவுகள் ஆன்லைனில் சேமிக்கப்படுகின்றன. வங்கி முதல் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் முதல் ஷாப்பிங் கணக்குகள் வரை அனைத்தையும் அணுக கடவுச்சொற்களை(Password) பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த கடவுச்சொற்கள் கசிந்தால், அது ஒரு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஹேக்கர்கள் இந்த கடவுச்சொற்களை பல புத்திசாலித்தனமான வழிகளில் திருடி, பின்னர் அவற்றை தவறாகப் பயன்படுத்துகின்றனர். கடவுச்சொற்கள் எவ்வாறு கசிந்து விடுகின்றன, ஹேக்கர்கள் உங்களை […]
தினமும் காலையில் கருப்பு மிளகு மற்றும் தேனுடன் சேர்த்து உட்கொள்வதன் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியும். அதன் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆயுர்வேதத்தில் தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இவற்றை ஒன்றாக உட்கொண்டால், அவை பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும். இந்த வீட்டு வைத்தியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை […]
12 வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல் இன்று மதியம் வெளியிடப்படுகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்; தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.தேர்வு எழுதியவர்களில், மறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் […]
2025-2026 ஆம் கல்வியாண்டு வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மையங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான மண்டல வாரியாக ஒருங்கிணைப்பு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டு முதல் வட்டார அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி மையம் (Career Guidance Centre) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025 2026 ஆம் கல்வியாண்டிலும் வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் செயல்படுத்தப்பட […]
நடிகர் சூர்யா பட புரமோஷன் நிகழ்ச்சியில் பழங்குடி சமூகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தேவரகொண்டா, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பாகிஸ்தானியர்கள் 500 ஆண்டு பழமையான பழங்குடியின மக்கள் போல் அறிவில்லாமல் இருக்கின்றனர் என கடுமையாக விமர்சனம் […]
நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது. அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி […]
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழ்நிலை, சர்வதேச பொருளாதாரத்துக்கு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது அமெரிக்கா நேரடியாக களமிறங்கி, ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டது. இது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு, சர்வதேச சந்தையில் முதலீட்டாளர்களை பதட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. பங்குசந்தைகள் மற்றும் […]

