ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிக்கு இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு, கல்லூரிக் கல்வி இயக்ககம் மூலமாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிக்கான இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை இராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது. இந்நிலையில் 2022-2023ஆம் ஆண்டிற்கான […]

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு முறை புற்றுநோயுடன் போராடி, இரண்டு முறையும் குணமடைந்த பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா, தற்போது மீண்டும் புதிய உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1ஆம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகைக்கு செவ்வாய்கிழமை பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், தற்போது வென்டிலேட்டர் […]

இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேச மாநிலம் மாண்டியில் இருந்து 27 கிமீ வட-வடமேற்கில் நேற்று இரவு 9.32 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 6 ஆம் தேதி, 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தேசிய தலைநகர் மற்றும் அண்டை […]

குளிர்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை தரக்கூடிய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் சில உணவு வகைகளை காண்போம்.  சர்க்கரைவள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் சில முக்கிய கூறுகளின் சத்துகள் உள்ளன . இது நல்லதொரு சுவையும் தருகிறது. மேலும் குழந்தையின் பாதுகாப்பை பலப்படுத்தும். வெல்லமானது இனிப்பு சுவை கொண்டது. மேலும் இதில் பீடைன், புரதம், கோலின், வைட்டமின் பி12, பி6, ஃபோலேட், கால்சியம், இரும்பு மற்றும் பல தாதுக்கள் நிரம்பி இருக்கிறது. நெல்லிக்காயில் […]

வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர் போன்ற பகுதிகளில் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டு கனமழை பெய்தது. அதன் காரணமாக 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அதிக மழை பெய்தது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை; மழை நீர் வெளியேற்றும் பணிகள் காரணமாக மாவட்ட ஆட்சியர் லலிதா […]

அறுபது, எழுபதுகளில் நட்சத்திரமாக ஜொலித்த மும்பையைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அப்பாஸ் மூன்டாசார் காலமானார். மும்பையைச் சேர்ந்தவர் பிரபல கூடைப்பந்து விளையாட்டு வீரர் அப்பாஸ் மூன்டாசார். 82 வயதாகும் இவர் 60, 70 களில் கூடைப்பந்தாட்டத்தின் நட்சத்திரமாக ஜொலித்தவர். ஹல்க் திரைப்படத்தில் ஜைஜாண்டிகான உருவம் மற்றும் நசீப் திரைப்படத்தில் உயரமான குத்துச்சண்டை வீரராக வலம் வரும் அமித்தாப்பச்சனுக்கு முன் ஒரு சிறந்த ஆட்டக்காரர் என்றால் […]

’லவ்டுடே’ திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை திட்டி பதிவிட்ட ஸ்கிரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது. கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ’லவ் டுடே’.  ’கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இந்த திரைப்படத்தை இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக […]

பிக்பாஸ் சீசன் 6-ல் அடிபட்டு வெளியே வந்த அசல்கோளாறு சங்கரை தாக்கும் விதமாக பாடல் இயற்றியுள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் கலக்கல் காமெடிகளை வழங்கி மக்கள் மத்தியில் வைகைப்புயல் வடிவேலு என்று பெயர் பெற்று இன்றளவும் புகழப்பட்டு வருபவர் ’’வடிவேலு’’. ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளளார். இம்சை அரசன் 23ம் புலிகேசி போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுகவுக்கு எதிராக திமுக சார்பில் […]

நளினியின் வழக்கறிஞர்கள் அனைவருமே லட்சக்கணக்கில் பணம் வாங்குபவர்கள் அவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாட்சியமாக இருந்த காவல்துறை பெண் அதிகாரி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேர் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள். இதையடுத்து நளினி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் சாட்சியாக இருந்த போலீஸ் அதிகாரி அனுசுயா என்பவர் பற்றியும் தெரிவித்தார். அவர் தன்னை […]

விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில் இனி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்று நோய் அபாயத்தால் கடந்த 3 ஆண்டுகளாக விமானத்தில் பயணிப்போருக்கு அவசியம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இந்த விதிமுறை விமானத்தில் மட்டுமின்றி பேருந்துகள், பொது இடங்கள், அலுவலகங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற விதிமுறை இருந்து வந்தது. இதன் […]