ஒற்றை தலைவலி என்பது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைவதால், ஏற்படும் கடுமையான வலி ஆகும். மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி, சில மணி நேரம் முதல் 2, 3 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், கடுமையான வெப்பம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. கடுமையான தலைவலி இருக்கும்போது, பின்புற மண்டை, கழுத்து ஆகியவற்றில் வலி உண்டாகும். தலைவலி அதிகம் இருந்தால் வாந்தி, குமட்டல் போன்ற […]

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக – தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று விஜய் அறிவித்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி வலுவாக இணைந்து செயல்பட்டு வருகிறது. பின்னர், அதிமுக – தவெக கூட்டணி அமையப் போவதாக […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில், கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்திருப்பதாக கூறினார். இது கர்நாடக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர், இந்த விவகாரம் நீதிமன்றம் […]

உணவகங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம். * உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைஃபாய்டு, மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். இதற்கான மருத்துவ சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். * எந்த […]

பாமக சார்பில் பொதுக்குழுவை கூட்டுவதற்காக புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சத்தில் இருக்கிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை வைத்து வருகிறார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று ராமதாஸை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, ராமதாஸின் கொள்கையை கையில் […]

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,302ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள உயிரிழந்துள்ள சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 4 பேரும், டெல்லி, தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் என […]

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விளாத்தி ஊரைச் சேர்ந்தவர் சிகாமணி. இவர் துபாயில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சிகாமணிக்கு துபாயில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த கோவையை சேர்ந்த சாரதா என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, சாரதாவிடம் சிகாமணி ரூ.6 லட்சம் வரை பணம் வாங்கியுள்ளார். மேலும், இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சாரதாவை சிகாமணி […]

கடந்த 1992ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். ஒவ்வொரு பெண்ணும் தரமான கல்வியைத் தொடரவும், பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்கவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பள்ளி சேர்க்கையை அதிகரிப்பது மற்றும் குறைந்தபட்சம் இடைநிலைக் கல்வியை ஆவது முடிடிக்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒற்றைப் பெண் குழந்தை உள்ள குடும்பங்களுக்கு நிலையான வைப்புத் […]

தட்கல் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடி குறித்து இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. தினமும் காலை சரியாக 10 மணிக்கு, லட்சக்கணக்கான இந்தியர்கள் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒரு விஷயத்தை முயற்சிக்கிறார்கள்.. ஆம்.. இந்திய ரயில்வேயின் IRCTC போர்டல் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது தற்போது எட்டாக்கனியாக மாறி உள்ளது. அவசர பயணத்திற்கான தீர்வாக இருக்க வேண்டிய இந்த தட்கல் டிக்கெட் முறை தற்போது வெறுப்பூட்டும் செயலாக மாறியுள்ளது. IRCTC […]

சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்துவிட்டு, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு, வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் தங்களை கணவன் – மனைவி எனக்கூறி மாதம் ரூ.4,000 வாடகையில் வீடு பார்த்து குடியேறியுள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் […]