தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் […]

உடல் உழைப்பு ஒவ்வொரு நாளும் முக்கியமானது என்றாலும் அளவுக்கு மிஞ்சிய சோர்வையும், அசதியையும் தரும் போது அது ஒரு சோதனை தான். சிறிதளவு உடல் செயல்பாடு கூட உங்களை சோர்வடைய செய்யலாம். எனினும் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை இந்த சிக்கலை தீர்க்க வலி நிவாரண மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டியதில்லை.இயற்கையான முறையில் வலியை குறைக்க வீட்டு வைத்தியம் செய்யலாம். இது பாதுகாப்பானது, பக்கவிளைவில்லாதது. அதோடு உடல் அசதியையும் சோர்வையும் […]

இப்போது அனைவருக்கு பிரச்சனைகளையில் நரை முடி தோன்றுவதும் ஒரு பிரச்சனையாகிவிட்ட நிலையில் அடிக்கடி ஹேர் டைஅடித்துவருவது வழக்கமாகிவிட்டது. முடி கருமையாக இருக்க டை அடிக்கின்றார்கள். ஆனால்,சில நாட்களிலேயே கருமை நீங்கி வெண்மையாக மாறுகின்றது. உடனே டை அடிப்பார்கள். இவ்வாறு அடிக்கடி டைஅடிப்பது நல்லதா இல்லை கெட்டதா? வாங்க தெரிந்து கொள்ளலாம். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை டை அடிக்க வேண்டும்… நாம் வாரத்திற்கு ஒரு முறை அல்லது 2 முறை […]

பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை வைக்க தொடங்கியுள்ளார். பாஜக காஷ்மீரி பண்டிட்களை தங்கள் வாக்கு வங்கிக்காக மட்டுமே பயன்படுத்துகிறது என்று கூறினார். பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது, “இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லாமல் வெறும் […]

பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கலைஞருமான புலக் கோகோய், குவஹாத்தியில் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவருக்கு 84 வயது. அஸ்ஸாம் முதல்வர் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார், “கலாச்சார உலகின் முக்கிய நபரான புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரும் புகழ்பெற்ற ஓவியரும் கார்ட்டூனிஸ்டுமான புலக் கோகோய் காலமானார் என்ற செய்தியால் நான் வருத்தமடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார். […]

தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் நேற்று இரவு 8 மணியளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பலர் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறினர். ஆரம்ப அறிக்கையின்படி, நடுக்கம் கிட்டத்தட்ட 5 வினாடிகள் நீடித்தது. நொய்டா மற்றும் குருகிராம் பகுதிகளிலும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது மற்றும் […]

திரைப்பட விளம்பரங்களில் கட்டாயம் சான்றிதழ் வகையை குறிப்பிட வேண்டும் தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி பாலமுரளி வெளியிட்ட செய்தி குறிப்பில்: தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு மத்திய சான்றளிப்பு வாரியம் (சிபிஎஃப்சி) வழங்கும் தணிக்கை சான்றிதழின் வகையை விளம்பரங்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட […]

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘வரைவு தொலைத்தொடர்பு சேவைகள் இணைப்பு ஒழுங்குமுறை விதிகள் 2022 குறித்து துறைசார்ந்தவர்களிடமிருந்து கருத்துகள், எதிர் கருத்துகளுக்கான கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. துறைச்சார்ந்தவர்களிடமிருந்து எழுத்துப்பூர்வமான கருத்துகளைப் பெறுவதற்கான கடைசித் தேதி அக்டோபர் 7, 2022 என்றும், எதிர் கருத்துகள் ஏதேனும் இருந்தால், அக்டோபர் 21, 2022 என்றும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. துறைச்சார்ந்தவர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், எழுத்துப்பூர்வ கருத்துகளைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 4 […]

யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில்இந்த வாரம் மகேஸ்வரி வெளியேறி இருக்கின்றார். பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக ராம் பற்றிய பேச்சுக்கள்அடிபட்டது. கடைசி இடத்தில் இருந்ததும் ராம்தான். ஆனால், மகேஸ்வரி வெளியேறி இருப்பது அனைவரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விறுவிறுப்பாக சென்ற நிகழ்ச்சியில் வி.ஜே. மகேஸ்வரியும்  நன்றாக விளையாடினார் என்ற பெயரை எடுத்தார். இருந்த போதிலும் எலிமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 6ல் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். […]

விஜய்டிவில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. ராஜா ராணி முதல் பாகத்தில் அறிமுகமானவர் ரித்திகா. அந்த நாடகத்திற்கு பின்னர்இவர் வேறு எந்த நாடகத்திலும் நடிக்கவில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர் குக்வித் கோமாளியில் குக்காக வந்தார். அதைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் எழிலை காதலிக்கும் அமிர்தாவாக நடித்து வருகின்றார். இந்த நாடகத்திற்கு பின்னர்இவருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றது. சிவாமனசுல சக்தி, […]