நீண்ட ஆயுள், அகால மரணம் என இரண்டுக்குமே காரணமானவர் சனிபகவான் தான். சனி பகவான் ஒருவருடைய ஜாதகத்தில் ஆட்சி பெற்றோ, உச்சம் பெற்றோ இருந்தால் அவர் அனைத்து விதமான செளபாக்கியங்களையும் பெற்று, வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவார். “சனி கொடுத்தால் எவர் தடுப்பார்?” என சொல்வார்கள். அது போல சனி பகவான் எந்த அளவிற்கு துன்பத்தை கொடுக்கக் கூடியவரோ, அதே அளவிற்கு நற்பலன்களையும் வாரி வழங்கக் கூடியவர். வாழ்க்கையில் தாங்க […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால், 2024-25-ஆம் கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது பள்ளிச் சீருடையுடன் மாணவ, மாணவிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 02.06.2025 அன்று முதல் பள்ளிகள் […]
அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் விற்கப்பட்ட தனிமனைகளை இணையவழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப்படுத்த அனுமதி தமிழக அரசு அரசாணை வெளியீடு. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் […]
பர்ஸில் வைத்திருக்கும் பணம் மென்மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாம் எண்ணுவோம். அதற்கு இயற்கையான முறையில் வாசனை தரக்கூடிய கிராம்பு, ஏலக்காய், ஜவ்வாது, பச்சை கற்பூரம் ஆகியவற்றில் ஏதேனும் வைக்கும்போது அது பணத்தை நமக்கு ஈர்த்துத் தரும் என்று சொல்லப்படுகிறது. பர்ஸில் அதிகமாகக் கடன் ரிசிப்ட் வைத்திருக்கிறீர்கள் என்றால், அது மேலும் கடன் அதிகமாக வாங்கும் சூழலை அதிகரிக்கும். நீங்கள் பணம் வைத்திருக்கும் பர்ஸில் மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷனை வைத்திருக்காதீர்கள். நோய் […]
உயிருள்ள நண்டுகளைப் படையல் வைத்து சிவனை வணங்குவதால் அவர்களின் குறைகள் நீங்குவதாகவும் மேலும் காது சம்பந்தமான பிரச்னைகள் நீங்கி, உடல் நலம் பெற உதவுவதாக கூறப்படுகிறது. குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலக் கோயிலில் உள்ள சிவனுக்கு உயிருள்ள நண்டுகளைப் படைத்து பக்தர்கள் வழிபடுகிறார்கள். குஜராத் மாநிலம், சூரத்தில் உம்ரா என்ற இடத்தில் புகழ் பெற்ற ராம்நாத் சிவா கெலா கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் […]
பலூசிஸ்தானின் முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியதாக பலூச் விடுதலைப் படை கூறியுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சுராப் நகரை பலூச் போராளிகள் கைப்பற்றினர். இதையடுத்து, சூராப் நகரத்தில் உள்ள காவல் நிலையத்தை சேதப்படுத்தி, பின்னர் தீ வைத்து எரித்தது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு BLA பொறுப்பேற்றுள்ளது இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பலூச் போராளிகள், சூரப் நகரத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் […]
பிறர் கொட்டாவி விடுவதைப் பார்த்தும் நமக்கும் அடிக்கடி கொட்டாவி வரும். இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் நடக்கும். இது குறித்தும் அறிஞர்கள் ஆய்வு நடத்தி ஆச்சரியமான முடிவுகளை பெற்றிருக்கின்றனர். பிறர் கொட்டாவி விடுவதை பார்த்ததும் கொட்டாவி வருவது என்பது குடும்ப உறுப்பினர்களிடையே தான் அதிகமாக இருக்கிறதாம். குடும்ப உறுப்பினர் கொட்டாவி விடுவதை பார்த்தும் கொட்டாவி வரும் எண்ணிக்கை அதிகம் என்றும், அதுவே அந்நியர்கள் என்றால் இந்த எண்ணிக்கை குறைவு தான் […]
தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், இயற்கைப் […]
உலகின் பிற நாடுகளுடனும் இந்தியா ஒற்றுமையை அதிகரிக்க விரும்புவதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். குஜராத்தின் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (மே 30, 2025) வெளிநாட்டு மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய அவர், சர்வதேச ஒத்துழைப்பு, தன்னிறைவு இந்தியா மற்றும் வசுதைவ குடும்பகரம் ஆகியவற்றின் […]
மதுரையில் நாளை திமுக பொதுக் குழுவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று மாலை ரோடு ஷோ’ செல்கிறார். இதையொட்டி, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மதுரை உத்தங்குடியில் நாளை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்கம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இன்று மாலை ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமானம் மூலம் முதல்வர் […]

