சமூக ஊடகங்களில் கவனத்தைப் ஈர்ப்பதற்காக படைப்பாளிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு சான்றாக, ஜமைக்காவை சேர்ந்த 29 வயது யூடியூபர் நிக் யார்டி (Nick Yardy) வெளியிட்டுள்ள தகவல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது 22 வயது காதலி ஜேட் (Jade) மற்றும் அவரது 44 வயது தாயான டானி (Dani) ஆகிய இருவருமே தன்னால் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளதாக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த இணையவாசிகளையும் உரைய வைத்தார் […]
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான நபர் ஒருவர் தனது கள்ளக்காதலியைக் கொலை செய்து, சடலத்தை இரும்புப் பெட்டியில் அடைத்து செப்டிக் டேங்கிற்குள் வீசிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போபாலின் நிஷாத்புரா பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் கோந்தியா மாவட்டத்தைச் சேர்ந்த சியா என்ற இளம்பெண்ணுடன் சமீருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீரின் குடும்பப் பின்னணியை அறியாத சியா, அவரை […]
கருவளம் தொடர்பான சிக்கல்கள் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற அறியாமை நிறைந்த காலம் மெல்ல மறைந்து வருகிறது. இன்றைய நவீன உலகில், ஆண்களும் சம அளவில் இத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை மருத்துவ உலகம் உரக்கச் சொல்கிறது. குறிப்பாக, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைபாடு என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களிடையே பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. இதற்குத் தீர்வு காண விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடும் முன், நம் […]
சென்னையில் நடைபெற்ற பாமக மாணவர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது. தொடக்கத்தில் உற்சாக மிகுதியால் மாணவர்கள் விசில் சத்தம் எழுப்பினர். இதனால், கடுப்பான அன்புமணி, “எதுக்கு இப்போ விசில்..? சத்தத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார். அதன் பிறகு அரங்கில் சத்தம் குறைந்து அமைதி நிலவியது. […]
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இன்று நிறுவனங்கள் முதல் சாதாரண சாமானியர்கள் வரை அனைவரின் வாழ்விலும் நீக்கமற நிறைந்துவிட்டது. சந்தேகங்களுக்கு விடை தேடுவது முதல் சிக்கலான அலுவலகப் பணிகளை முடிப்பது வரை ஏஐ சாட்பாட்கள் (AI Chatbots) வலதுகரமாக செயல்படுகின்றன. ஆனால், இந்தத் தொழில்நுட்ப தோழர்களிடம் நாம் பகிரும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்கள் நமக்கே வினையாக முடியும் என்பதை அண்மைய நிகழ்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. முதலாவது சம்பவம், அந்த்ரோபிக் நிறுவனத்தின் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக அறியப்படுபவரும், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயருமான பி.எம்.மன்னன், தனது ஆதரவாளர்களுடன் விரைவில் அதிமுகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த இணைப்பை உறுதி செய்ய அவர் காத்திருப்பதாக தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவருக்காக […]
தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தலை இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, மற்ற கட்சிகளின் மூத்த நிர்வாகிகளை ஈர்க்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், செங்கோட்டையன் மற்றும் கு.ப.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களின் அரசியல் நகர்வுகளை தொடர்ந்து, தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அக்கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்றிரவு கட்சித் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், […]
தமிழகத்தின் ஆன்மீக பூமியில் எண்ணற்ற சிவாலயங்கள் அருள்பாலித்தாலும், “பிணி தீர்க்கும் தலம்” என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். ‘வைத்தியன்’ என்றால் மருத்துவன், ‘ஈஸ்வரன்’ என்றால் கடவுள். உலகிற்கே மருத்துவராக திகழும் சிவபெருமான், இங்கு வைத்தியநாத சுவாமியாக வீற்றிருந்து பக்தர்களின் உடல் மற்றும் மன ரீதியான துயரங்களை துடைத்து வருகிறார். இதன் காரணமாகவே, இந்த ஊரே இறைவனின் திருநாமத்தால் ‘வைத்தீஸ்வரன் […]
பித்ருக்களின் ஆசியைப் பெறுவதற்கு உகந்த தினமாக சொல்லப்படும் அமாவாசை திதி, மாதந்தோறும் வந்தாலும் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசைக்குத் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசையை போலவே, இன்று (செவ்வாய்க்கிழமை) மாசி மாத அமாவாசையும் ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. முன்னோர்களுக்குச் செய்யும் தர்ப்பணம் மற்றும் தான தர்மங்கள் மூலம் குடும்பத்தில் நிலவும் தடைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும் என்பது […]
சிங்கப்பூரில் எலக்ட்ரிசியனாக பணியாற்றி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தனது மனைவி சந்தனமாரியம்மாளின் இன்ஸ்டாகிராம் நடவடிக்கைகள் மற்றும் பண விவகாரங்களால் ஆத்திரமடைந்து, அவரை நடுரோட்டில் வைத்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். 2017இல் திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். சிங்கப்பூரில் கடினமாக உழைத்து பாலமுருகன் அனுப்பி வைத்த லட்சக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் நகைகளை சந்தனமாரியம்மாள் முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதிலும், […]

