வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் வாட்ஸ்அப் செயலியில் […]
தனது மனைவிக்கு காதலனோடு திருமணம் செய்து வைத்த கணவன் உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில், கணவர் ஒருவர் தனது மனைவிக்கு அவரது காதலனையே திருமணம் செய்து வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிர்சாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் கடந்த ஆண்டு ரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மனைவி ரோஸ் தனது அண்டை வீட்டை சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்துள்ளார். […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசு அமைத்த நிபுணர்கள் குழுவின், வரைவு தயார் நிலையில் இருப்பதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, பொது சிவில் சட்ட வரைவைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழு தனது பணியை நிறைவு செய்துள்ளது. மாநிலத்தில் விரைவில் இந்த பொது சிவில் சட்டத்தை […]
பொறியியல் படிப்புக்களில் சேர விண்ணப்பித்த சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் மேற்படிப்புகளில் நீட் மருத்துவப்படிப்பு, பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தரப்பட்ட துறை சார்ந்த படிப்புகளில் சேர்வதற்கான அடுத்தகட்ட முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்களில் 2,28,122 மாணவர்கள் […]
பெண்களின் உடலுறவு ஒப்புதல் அளிக்கும் வயதை, 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, அரசு சிந்திக்க வேண்டும் என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் 20 வயது இளைஞனுக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில், பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, இது போன்ற வழக்குகளில் ஆண் பிள்ளைகள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, வயது காரணமாக ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகின்றனர் என நீதிபதிகள் கூறினர். […]
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தின்படி தனிநபரோ அல்லது கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுத்தேர்தலில் அல்லது மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாமல் பெற்ற, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றவையாகும். இவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தகுதியுள்ள அரசியல் கட்சி அதிகாரமளிக்கப்பட்ட வங்கிக் கணக்கின் மூலம் மட்டுமே பணமாக்க முடியும். […]
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர்களுக்கென 17 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகள் 12 விடுதிகள் மாணவர்கள் விடுதியும், 5 மாணவியர்கள் விடுதியும் செயல்படுகின்றன. இதில் பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி விடுதிகள் உள்ளன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணனவியர்களும்,அதற்குமேல் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி, பாலிடெக்னிக் […]
12-ம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இந்த உதவித்தொகை ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை வழங்கப்படுகிறது. அரசின் அறிவிப்பிற்கு பிறகே இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வை (National Means cum Merit Scholarship) 8-ம் வகுப்பு […]
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,073, பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16,073, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13,610, பி.டி.எஸ். […]
ஜூன் மாதம் மெக்சிகோவில் கடுமையான வெப்பநிலை காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. இதன் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட வெப்பம் சார்ந்த நோய் அறிகுறிகளுடன் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மெக்ஸிகோ நாட்டு சுகாதாரத் துறைச் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவிவரும் கடும் வெயில் […]