தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் பெரியகருப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலைகள் கிலோ ரூ.80 முதல் 120 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கின்றன. வரத்துக் குறைவால் சாம்பார் வெங்காயத்தின் விலையும் அதிகரித்து கிலோ 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னையில் கூட்டுறவுத்துறை மூலம் இயக்கப்படும் பண்ணைப் பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ […]

முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கம்‌ மாநிலத்தில் பொதுக்க கூட்டத்தில்‌ பங்கேற்றுவிட்டு திரும்புகையில்‌ சிலிகுரியில்‌, மோசமான வானிலையால்‌ ஹெலிகாப்டர்‌ அவசரமாக தரையிறக்கவே முதல்வர்‌ மம்தாவுக்கு காயம்‌ ஏற்பட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். MRI ஸ்கேன்‌ செய்ததில்‌ அவரின்‌ இடது முழங்கால்‌, இடுப்பு பகுதியில்‌ காயம்‌ ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

பக்ரித் பண்டிகை முன்னிட்டு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது ‌ இது குறித்து விரைவுப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்‌ வெளியிட்ட அறிக்கையில்‌, பக்ரீத் முன்னிட்டு இன்று சென்னையில்‌ இருந்தும்‌ மற்றும்‌ பிற இடங்களிலிருந்தும்‌ கூடுதலான பயணிகள்‌ தமிழ்நாடுமுழுவதும்‌ பயணம்‌ மேற்கொள்வார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்‌ காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மூலம்‌ தினசரி இயக்கப்படும்‌ பேருந்துகளுடன்‌ கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே […]

காஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் திருநங்கைகளை பற்றிய விழிப்புணர்வு கதையை எடுத்த ராகவா லாரன்ஸ், ரொம்ப வித்தியாசமாக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை திருநங்கை கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார். இது தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஞ்சனா கேரக்டரின் நடித்த சரத்குமாரின் வளர்ப்பு மகளாக அந்த படத்தில் நடித்தவர் தான் திருநங்கை திவ்யா. இவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திவ்யா தன்னுடைய பேட்டியில் […]

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி […]

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,87,847. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18,767 பேர் அதாவது 11.09 சதவீதம் பேர் அதிகம். அவ்வளவு பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் […]

தமிழ் திரையுலகில், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வட சென்னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி முத்திரை பதித்து வருபவர் இயக்குநர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் […]

டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதி, குழந்தைப்பேறின்மையால் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2009-ல் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் ஆரோக்கியமான இரட்டை பெண் குழந்தைகள் அத்தம்பதிக்கு பிறந்துள்ளன. தங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல பெற்றோருக்கு குழந்தைகள் விஷயத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மரபணு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவில், இரு பெண் குழந்தைகளின் […]

பிரதமா் மோடியிடம் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக் கேட்ட அந்த கேள்வி – இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்? என்பது. அவரது கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ”எனக்கு நீங்கள் […]

மின்சார வாகன தயாரிப்புக்கு பெயர்பெற்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக அந்நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். விலை உயர்ந்த டெஸ்லா மின்சார வாகனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. சொகுசு என்ற சொல்லுக்கு ஏற்றார் போல், ஆட்டோ பைலட் முறையில் செல்லும் இடத்தின் விவரத்தை பதிவிட்டால் போதும், டெஸ்லா கார் தானியங்கியாக செயல்பட்டு நாம் செல்ல வேண்டிய […]