அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயக்கும் முன்னணி விமான எஞ்சின் சப்ளையரான GE ஏரோஸ்பேஸ் இன்று இந்திய விமானப் படையில் பயன்படுத்தும் போர் விமானங்களுக்கான இன்ஜின்களை தயாரிப்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா ஆயுத உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் போர் விமானங்களுக்கான ஜெட் இன்ஜின்களை HAL உடன் இணைந்து அமெரிக்காவின் GE […]
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இன்விக்டோ (Maruti Suzuki Invicto). டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி இன்விக்டோ, வரும் ஜூலை 5ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக இன்விக்டோ காரின் புதிய டீசர் ஒன்றை, மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், மாருதி சுஸுகி இன்விக்டோ பற்றிய பல்வேறு புதிய […]
விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அடித்த அட்ராசிட்டியால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் லிஃப்ட் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் […]
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜூன் 16ஆம் தேதி பாட்டியாலாவிலிருந்து சங்கரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பக்ரா கால்வாயில் ஒரு பெண் தவறி விழுந்து நீரில் மூழ்கி கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அங்கிருந்த யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், வேகமாக தண்ணீர் ஓடும் கால்வாயில் குதித்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலாக நீரில் […]
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை வெயில் மிகவும் உக்கிரமாக இருந்தது. கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு வெப்பம் மிக மோசமாக இருந்தது. இதனால் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே இருந்தது. குறிப்பாகச் சென்னையில் வெயில் கொளுத்தியது. இந்தாண்டு சென்னையில் மட்டும் மொத்தம் 18 நாட்கள் வெப்பம் […]
இது இந்துக்களின் முக்கிய ஸ்தலம். தனது ஆயுட்காலத்திற்குள் ஒருமுறையாவது காசி சென்று வர வேண்டுமென்று விரும்புவர். இந்த காசி தலமானது உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் இருபுறங்களில் வாரணா, ஹசி என்ற கங்கை நதிகள் ஓடுவதால் இதற்கு வாரணாசி என்று பெயர் வந்தது. ஒவ்வொரு சிவபக்தனும் இங்கு வந்து உயிர் துறப்பதை பாக்கியமாக கருதுவர். இங்கு இறக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் சிவனே ப்ரணவமந்திரத்தை உபதேசம் செய்வதால் அவர்களுக்கு மறுஜென்மம் கிடையாது என்பது […]
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்தவர் பூனம் குமாரி. 27 வயது நிரம்பிய இவர், தன்னுடைய கல்லூரித் தோழியான 25 வயதுடைய பிரீத்தி சாகரைக் காதலித்து வந்துள்ளார். அதாவது, இவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரீத்திக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர். ஆனால், பூனம் குமாரி நினைவு காரணமாக திருமண ஏற்பாடுகளைத் தட்டிக் கழித்து வந்துள்ளார் பிரீத்தி. ஒருகட்டத்தில் பூனம் குமாரி மற்றும் பிரீத்தி […]
70-களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல்ஹாசன் மீது பல நடிகைகள் நெருக்கமாகவும் காதல் கிசு கிசுக்களில் சிக்கியும் வந்தனர். அப்படி காதல் மன்னனாக அப்போதில் இருந்தே கொடிக்கட்டி பறந்த கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகர் பிரபுவின் லீலைகள் அமைந்திந்து உள்ளது. 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த பிரபு சில நடிகைகளிடம் வெளிப்படையான காதலில் இருந்து வந்தார். அந்தவரிசையில் முதலில் இருப்பது நடிகை குஷ்பூ. தர்மத்தின் தலைவன், […]
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் நேற்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இது என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆட்டம் தொடங்கியது முதல் […]
பூமியின் சொர்க்கம்’ என்று புகழப்படும் மணிப்பூர்தான், இன்று புகை மண்டலமாய்க் காட்சி தந்துகொண்டிருக்கிறது. இடஒதுக்கீடு தொடர்பாக மெய்டீஸ் இன மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைத்தால் தங்களுக்கான இடஒதுக்கீடு அவர்களால் பறிக்கப்படும்; அவர்கள் தாங்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி தங்களை வெளியேற்றக் கூடும் என குக்கி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மணிப்பூரில் ’குக்கி’ என்ற பழங்குடியினத்தவருக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் ’மெய்டீஸ்’ என்ற பழங்குடியினர் அல்லாதவர்களுக்கும் இடையே கடந்த […]