ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், ஐபிஎல் இல் கொல்கத்தா அணிக்காக விளையாடிய வீரருமான ரஹ்மனுல்லா குர்பாஸ்-க்கு தோனி தனது சிஎஸ்கே அணி நம்பர்-7 ஜெர்ஸியை பரிசாக அனுப்பியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய சிஎஸ்கே அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இன்று வரை அனைவராலும் ரசிக்கப்படும் கொண்டாடப்படும் ஒரு கிரிக்கெட்டராக திகழ்ந்து வருகிறார். அனைத்து நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் உட்பட ரசிகர்களும் கூட தோனிக்கு ரசிகர்கள் […]
ஐசிசி தலைமை நிர்வாக தரப்பில் இருந்து புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் கிரிக்கெட் தொடர்களின் முடிவில் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்த கையோடு ஆஷஸ் தொடரானது ஆரம்பித்துள்ள வேளையில் தற்போது ஐசிசி […]
டி.என்.பி.எஸ்.சி தொகுதி 4 காலியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்படுவது போதுமானதல்ல. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 24-ஆம் நாள் நடத்தப்பட்ட தொகுதி 4 தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,117 என்பதிலிருந்து 10,748 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் […]
தோனியின் முழங்காலில் ஏற்பட்ட காயம் தனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால், இது குறித்து அவர் யாரிடமும் எதுவும் கூறவில்லை என்றும் ஒரு போட்டியை கூட தவறவிடவில்லை என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். நடப்பாண்டின் ஐபிஎல் தொடரின் 16-வது சீசனை வெற்றி பெற்று 5-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசன் முழுவதும் முழங்கால் […]
இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை மண்டலத்தில் 138 கடைகள் மூடப்பட உள்ளன. அதே போல காஞ்சிபுரம் வடக்கு பகுதியில்15 கடைகளும் மற்றும் தென் பகுதியில் 16கடைகளும் மூடப்பட உள்ளன. திருவள்ளூர் கிழக்கு பகுதியில் 32 கடைகளும், மேற்கு பகுதியில் 14 கடைகளும் மூடப்படவுள்ளன. […]
ஆப்பிள் தனது சுய பழுதுபார்க்கும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனம், தங்களது ஐபோன்கள் மற்றும் மேக் போன்றவற்றை பயனர்களே சரி செய்து கொள்ளும் திட்டத்தை ஐபோன் 14 சீரிஸ் மற்றும் எம்2 மேக் போன்ற சாதனங்களுக்கு விரிவுபடுத்தி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயனர்கள் பழுதுபார்ப்பதற்குத் தேவையான அனைத்து உதிரி பாகங்களையும், அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்ற விளக்க […]
கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூலை 3-ம் தேதி வகுப்புகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 75, 811 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு இனசுழற்சி முறையில் மாணவர் சேர்க்கை […]
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் முழுநேர டிஜேவை (DJ) அமெரிக்கா வானொலி நிலையம், உருவாக்கி உள்ளது. வளர்ந்துவரும் நவீன காலகட்டத்திற்கேற்ப அனைத்து இடங்களிலும் மனிதர்களின் வேலைகளை குறைக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ரோபோக்கள் இறங்கிவிட்டன. அந்தவகையில் தற்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான AI தற்பொழுது தொழில்நுட்ப உலகில் மிகபெரிய அளவில் உருவெடுத்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு […]
விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களை அணுகி தகுதிக்கு ஏற்படக் கடன் பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-07ஆம் ஆண்டு முதல் பயிர் கடனுக்கான வட்டி 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு, தற்போது வரை 7 சதவீத வட்டியில் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2 சதவீதம் வட்டி இழப்பைத் தமிழக அரசு வட்டி மானியமாகக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கி வருகின்றது. 2009ஆம் ஆண்டு முதல் உரிய காலத்திற்குள் […]
நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழி உண்டு. இதற்கு உணவினை மென்றுத் தின்றால் நுாறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பதுதான் பொருள். அப்படி நம் உடலில் மிகவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது பற்கள். குழந்தைகளின் பற்களை பராமரிப்பது குறித்து நமது குழந்தைகள் நல மருத்துவ வல்லுநர் விளக்குகிறார். குழந்தைகளுக்கு முதன்முதலாக பற்கள் முளைக்கும் தருவாயில் நீராகாரத்திலிருந்து (தாய்ப்பால் உள்பட) திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் வளர வளர […]