கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவின் ஆதாரத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற ஸ்ரீமதி என்ற மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவமும் அந்த இறப்பு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததும் தமிழ்நாட்டையே உலுக்கியது. மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. […]

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வின் அதிகபட்ச வயதை 40ஆக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”டிஎன்பிஎஸ்சி நடத்தும் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான வயது வரம்பை உயர்த்தப்பட வேண்டும் என்ற தேர்வர்களின் கோரிக்கை மீண்டும் நிராகரிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதல் தொகுதி தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். தமிழக […]

பெண்களுக்கான இலவசப் பேருந்து முழுவதையும் பிங்க் நிறத்தில் மாற்றும் நடவடிக்கையை தமிழக போக்குவரத்துத்துறை தொடங்கியுள்ளது. பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யும் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் (PINK) நிற பெயிண்ட் அடிக்கப்பட்டன. இந்த பிங்க் நிற பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த வாரம் சென்னையில் தொடங்கி வைத்தார். பேருந்தில் முன்புறம் மட்டும் பிங்க் நிற பெயிண்ட் […]

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வ்போது பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு சுதந்திர தின சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.2,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, 2.5ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இத்திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.. இந்தத் திட்டத்தின் கீழ் வரும் ரூ.3,000 மதிப்புள்ள இலவச பரிசுகள்: 75 ஜிபி கூடுதல் […]

குடும்பப் பிரச்சனை காரணமாக மருமகளின் தலையை வெட்டி எடுத்து வந்து, காவல் நிலையத்தில் சரணடைந்த கோபக்கார மாமியாரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பம்மா. இவர், தனது மருமகள் வசுந்தரா தலையை வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலையுடன் நின்ற சுப்பம்மாவை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரைக் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து […]

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.39,120-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென […]

போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் குறித்து பேசும் முதல்வா் மு.க.ஸ்டாலின், முதலில் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”போதைப்பொருள் நடமாட்டத்துக்கு துணை செல்வோா் மீது நடவடிக்கை எடுக்க சா்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளாா். போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளையும் விரிவாக முதல்வா் கூறியுள்ளாா். ஆனால், முதல்வருக்கு மதுபானம்தான் அதிக போதை தருகிறது என்பதை பற்றிய […]

தனது தந்தை செய்த தவறை ஸ்டாலின் சரி செய்ய வேண்டும் என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசு சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது..இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “ போதை பழக்கம் கொலை, கொள்ளை, பாலிய தொல்லை உள்ளிட்ட பல குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைகின்றது.. போதை என்பது சமூகத்தையே அழித்துவிடும்.. […]

புதுச்சேரி பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் புதுச்சேரி பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எதிர்பாக்கப்படுகிறது. புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டமானது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரையை அடுத்து, பேரவை தலைவர் சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைத்தார். பட்ஜெட்டுக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால், கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசு புதுச்சேரி பட்ஜெட்டுக்கு ஒப்புதல் […]

திட்டக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காணாமல் போன நிலையில், அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி காமுட்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராசு என்பவரின் மகள் மஞ்சு (21). இவர் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவருக்கும், ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும், கடந்த 10ஆம் தேதியன்று திருமண நிச்சயம் செய்யப்பட்டது. […]