சென்னை அருகே குடிபோதையில் இளைஞர்கள் செய்த தகராறில் தலைமைக்காவலரின்மண்டையில் அடிபட்டு படுகாயம் அடைந்துள்ளார். சென்னை திருவொற்றியூர் அருகே தொட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தலைமைக் காவலர் செந்தில் குமார். இவர் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரின் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். காலையில் வீட்டருகே சில இளைஞர்கள் நின்றுகொண்டு மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை தூக்கி செந்தில்குமாரின் கார் மீது வீசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அவர்களிடம் சென்று தட்டிக் கேட்டுள்ளார். மது போதையில் […]
பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணியிடம் ’’உனக்கு 1ம் தேதிதான் குழந்தை பிறக்கும் எனக்கூறி அரசு மருத்துவர்கள் அலைக்கழித்த நிலையில் நடந்தே சென்று தனியார் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்தார். தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கா(22) . நேற்று இரவு இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதும் வெளியில் ஸ்கேன் எடுத்து வரும்படி கூறியுள்ளார். வலியுடனே […]
பாலிசிதாரருக்கு காப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடித்து வந்த எல்.ஐ.சி. நிறுவனம் 2 மாதத்திற்குள் தொகை உரியவருக்கு தர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்யைச் சேர்ந்தவர் திவ்யா . இவர் கடந்த 2009 மற்றும் 2010ல் 2.25 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 காப்பீடுகள் எல்.ஐ.சியில் எடுத்துள்ளார். தந்தையின் பேரில் எடுத்த காப்பீடு அவர் தந்தை 2012ல் இறந்ததை அடுத்து காப்பீடு தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தார். நீண்ட நாட்களாகியும் […]
லண்டனில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் புறப்பட்டார். ராணி 2ம் எலிசபெத் (96) கடந்த செப்டம்பர் மாதம் 8ம் தேதி காலமானார். பால்மொரல் கோட்டையில் இருந்து அவரது உடல் எடுத்துவரப்பட்டு லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் சவப்பெட்டியில் வைத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிச்சடங்கில் உல நாடுகளிலிருருந்து 500க்கும் மேற்பட்ட முக்கிய […]
லண்டனில் மறைந்த எலிசபெத் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி அந்நாட்டு சட்டத்திற்கு புறம்பாக ஓடிவந்தவரை போலீஸ் கைது செய்தது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் மறைந்த ராணி 2ம் எலிசபெத் உடல் சவப்பெட்டிக்குள்வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை பல ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் மக்கள் பொறுமையாக மழை , வெயில் என எதையும் […]
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெண் ஊழியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்கான வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. “வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான அறிவிப்பை கடந்த பட்ஜெட்டின் போது முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டார். இதை செயல்படுத்த, மாநில அரசு mahilawfh.rajasthan.gov.in ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, […]
சிக்கபல்லாபுராவில் தாறுமாறாக வந்த லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது அடுத்தடுத்து மோதி சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல் காவலாளி மீதும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபுராவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பேரேசந்திரா காவல்நிலையத்திற்குள்பட்ட பகுதியில் தாறுமாறாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் எதிரே கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. கார்மீது மோதாமல் இருக்க லாரி ஓட்டுனர் வாகனத்தை திருப்பியுள்ளார். இதனால், […]
2016 சட்டசபை தேர்தலின் போது, ‘அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்’ என அப்போதைய முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளரும் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நிலையில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை செயல்படுத்தினார்.இதனால், மின் வாரியத்திற்கு ஆண்டுதோறும் ஏற்பட்ட, 3,300 ரூபாய் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. தமிழகத்தில் முதல்வர், […]
திருப்பூர் அருகே ரூ.5 கோடி கேட்டு சிறுவனைக் கடத்திக் கொண்டு கேரளாவிற்கு சென்ற இளைஞர் அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் அருகே மகாலட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் சிவக்குமார் – கவிதா தம்பதியினர். இவர்களின் மகன் அஜய் பிரணவ் . கட்டிடப்பொறியாளர் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வருகின்றார். கட்டிட ஒப்பந்ததாரர் ராகேஷ் என்பவருடன் சமீபத்தில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கொடுக்கல் வாங்கலில் […]
செல்வா இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான படம் அமராவதி. இப்படம் பாக்ஸ் அபீஸில் நல்ல வசூலை பெற்றது.. இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார்.. நடிகை சங்கவிக்கும் இது தான் முதல் படம்.. பின்னர் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய முன்னணி நடிகையாக சங்கவி வலம் வர தொடங்கினார்.. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.. […]