fbpx

தமிழகத்தில் வரும் 12ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை  முதல் வரும் 12-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் […]

தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்திககொள்ள வேண்டும். இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா […]

அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில், இது வரை 1லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் வகையில் “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்தொகை திட்டம்” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த […]

ஏரிகள்‌ மற்றும்‌ குளங்களில்‌ படிந்திருக்கும்‌ வண்டல்‌ மண்ணை இலவசமாக விவசாயிகள்‌ எடுத்துப்‌ பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகள்‌ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்‌, ஏரிகளிலும்‌ குளங்களிலும்‌ படிந்திருக்கும்‌ வண்டல்‌ மண்ணை விவசாயிகள்‌ பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையில்‌, 14-8-2021 அன்று “ஏரிகள்‌, குளங்களில்‌ படிந்திருக்கும்‌ வண்டல்‌ மண்ணை விவசாயிகள்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌, மாவட்ட ஆட்சியரின்‌ அனுமதியைப்‌ பெற்று எடுத்துக்‌ கொள்ள தொழில்‌ துறை, நீர்வள […]

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் […]

சென்னை கொளத்தூரில் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து‌ வரும் 28 வயது இளம்பெண், அவருடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கொளத்தூர் அண்ணா சிலை பகுதியில் உள்ள ஒரு பிரவுசிங் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.   அந்த கடையின் உரிமையாளர் அருணாச்சலமும்(28) என்கிற வாலிபரும் திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதனால் அருணாச்சலத்துடன் நெருங்கி பழகி […]

காஞ்சிபுரத்தில் உள்ள செவிலிமேடு பகுதியை சேர்ந்தவர் 22 வயதான விஜய். இவர் இந்த பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். விஜய்யின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். அதன் பிறகு விஜய் கட்டுப்படுத்த ஆள் இல்லாததால் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் விஜய் அவருடைய தாய் பாஞ்சாலியுடன் எப்பொழுதும், சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் செவிலிமேடு பகுதியிலேயே விஜய் தனியாக ஒரு வீடு வாடகைக்கு கொடுத்து அதில் வசித்து […]

ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமை (ஜூலை 11) காலை 9 மணிக்கு ஒத்திவைத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனுவில், “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு […]

திருப்பூர் மண்ணரை கருமாரம்பாளையத்தில் வசித்து வருபவர் சுபா(23). இவர் கடந்த 30-12-2021 அன்று திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள சிங்கப்பூர் ஷாப்பிங் கடையில் 200 ரூபாய்க்கு, இரண்டு ஜோடி காலணி வாங்கினார். இதற்கு கடையில் ரசீது கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை. இந்தநிலையில் சுபா 200 ரூபாய் கொடுத்து வாங்கிய காலணி, கடந்த 7-1-2022 அன்று அறுந்து விட்டது. உடனே சுபா அந்த அருந்த காலணியை எடுத்து சென்று கடையில் கேட்டுள்ளார். அவர்கள் […]

நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசை என்று நடிகை பிரியா ஆனந்த் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார்களில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் நித்தியானந்தா. ஆரம்பத்தில் இவரை கடவுளின் மறு உருவமாக பார்த்து வந்த மக்கள், இவரின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட பிறகு இவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர். இவர், நடிகை ரஞ்சிதாவுடன் படு நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள் வெளியாகி பெரும் […]