fbpx

போடாத சாலைக்கு, சாலை போடப்பட்டதாகக் கிடைத்த பதிலால் அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர் கொரட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (54). இவர், அதே பகுதியில் உள்ள சாலை காணாமல் போனதாக வினோத புகார் ஒன்றை கொரட்டூர் போலீசில் கொடுத்துள்ளார். அந்த புகாரில், அம்பத்தூர் 7-வது மண்டலத்திற்கு உட்பட்ட கொரட்டூரில் உள்ள என்.ஆர்.எஸ் சாலை, சீனிவாசபுரம் மற்றும் கண்டிகை சாலை குறித்து தகவல் […]

காஞ்சிபுரத்தில் ரவுடி கும்பல் ஒன்று‌ கையில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ஒருவரை விரட்டிச்சென்ற சம்பவம் நேற்று நடந்ததுள்ளது. அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு, கோயில், மற்றும் பட்டு புடவை வாங்குவதற்காகவும் பல பகுதிகளிலிருந்து மக்கள் வருவது வழக்கம் அதனால் எப்பொழுதும் காஞ்சிபுரம் சாலைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் எனவே பொதுமக்களை பாதுகாக்க காவல்துறை ரோந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் […]

அமைதியின் அடையாளம் ஓபிஎஸ் இனியும் அமைதியாக இருக்கமாட்டார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ”கடந்த 2017இல் காமராஜ் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோதே அவர் மீது ஊழல் புகார் கொடுத்தேன். திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் டிவிஎஸ்-சிக்கு கடிதம் எழுதினேன். அதன் காரணமாக தற்போது […]

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜப்பானில் பாராளுமன்ற மேல்-சபைக்கு வரும் 10ஆம் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்றிரவு நாரா நகரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், […]

கடந்த 2020-ம் ஆண்டு சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு எதிரான ஆய்வு கடுமையாக்கப்பட்டது. இதனால் டிக்-டாக் பேன்ற 200-க்கும் மேற்பட்ட சீன நாட்டின் செல்போன் ஆப்கள் முடக்கப்பட்டன. இந்தியாவில் வணிகம் புரியும் சீன நாட்டு நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில், சீன நிறுவனமான விவோ செல்போன் கம்பெனி அதன் முதல் விற்பனை தொகையான ரூ.62,476 கோடியை, இந்தியாவுக்கு வரிசெலுத்தாமல் சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக […]

கல்வி மற்றும் தொழில் கடன் பெற, சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 1ன் கீழ் பயன்பெற குடும்ப […]

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்‌ மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வில் தோல்வியடைந்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தன்னுடன் படைத்த மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் […]

தமிழகத்தில் வரும் 12-ம் தேதி வரை மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது… சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை […]

நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக் கூடிய விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று மாலை விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அதேபோல் நாளை […]

ஒரே நேரத்தில் வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த அரசு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரரான செய்யாத்துரை அவரது எஸ்.பி.கே நிறுவனத்தின் வாயிலாகப் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், செய்யாத்துரையின் நிறுவன கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் ஆடிட்டரின் நிறுவனமான மயிலாப்பூரில் உள்ள ஜி.பி.ஏ. கன்சல்டென்சி அலுவலகத்திலும் […]