fbpx

பெங்களூரு கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவர் பள்ளிக்கு தினமும் கரடகியில் இருந்து வந்து சென்றுள்ளார். இந்நிலையில், ஆசிரியர் வேலை பார்த்து வந்த முகமது அவருடன் வேலை பார்த்த ஆசிரியை, மாணவிகள், மேலும் அக்கம்பக்கத்து பெண்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சிலரை […]

அரசுப் பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது என்று போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, ஆட்சி அமைந்தபிறகு தமிழ்நாட்டில் சாதாரண நகர பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு பயணிக்கும் பெண்களிடம் நடத்துனர்கள் ஏளனமாக நடந்து கொள்வதாக அரசுக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளன. இதனால் போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர், ஒவ்வொரு போக்குவரத்து கழகத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். […]

மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிற்கும் தமக்கும் இடையே அதிகாரப்போட்டி எதுவும் இல்லை என துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால், ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, அங்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவும் பாஜகவும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. இந்நிலையில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே […]

கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போதும் […]

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், போடலகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி (26), சாப்ட்வேர் கம்பெனியில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பிறகு ஊர் திரும்பியதும். ரவாளியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடம் […]

நாடு வாரிசு அரசியலைப்‌ பார்த்தும்‌, வாரிசு அரசியல்‌ செய்யும்‌ கட்சிகளைப்‌ பார்த்தும்‌ நொந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, “பாக்யா நகரான ஹைதராபாத், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல சமஸ்தானங்கள், பிராந்தியங்களை ஒன்றிணைத்து, […]

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை(35), தன் கணவர் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். அவருடைய கணவரும் ஓர் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அந்த ஆசிரியைக்கு அயோத்தி மாவட்டத்திலுள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்கு, டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இந்நிலையில் அப்பகுதியில் வசித்து வந்த மாணவனுடன் அந்த ஆசிரியைக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது அந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனிடையே, அந்த ஆசிரியை 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். […]

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் கொரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தந்தை, மகனை காவல் நிலையத்தில் […]

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் (45). இவருக்கு கடந்த வருடம் எலக்ட்ரிசிட்டி போர்டில் வேலை கிடைத்தது. இதனால் மதுரை அரசரடியில் முத்துராமலிங்கம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் நரிக்குடி, திருச்சுழி ரோட்டில் காரேந்தல் பஸ் ஸ்டாப் அருகே படுகாயங்களுடன் மர்மமான முறையில், முத்துராமலிங்கம் இறந்து கிடப்பதாக அங்குள்ள மக்கள் திருச்சுழி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் […]

பள்ளி, கல்லூரி மாணவர்களைப் போதை பழக்கத்திலிருந்து வெளிகொண்டு வர, அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் உட்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாகப் போதை பழக்கம் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாகப் பள்ளிக்கூடங்களில் கூட இந்த போதை பழக்கம் உள்ளதைப் பார்க்க முடிகிறது. போதைப் பொருட்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி வாசல்களில் அதிகம் […]