பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக் கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் உதவி வழங்கி வருகிறது. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]

பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற […]

தமிழர் பண்பாட்டில் மார்கழி மாதம் என்றால், வண்ண வண்ண கோலங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் அழகான கோலங்களை இடுவது, பல நூறு ஆண்டு பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் ஒரு தொன்மையான வழக்கம். சங்க இலக்கியங்கள் முதல் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் வரை, பல இடங்களில் கோலம் போடும் பழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கலாச்சாரப் பழக்கத்திற்குப் பின்னால், ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏராளமான […]

தொழில், அரசு மற்றும் சமூக தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தலைமையிலான மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமெடுத்து வரும் நிலையில், உலகளாவிய AI Vibrancy Index பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்த அறிக்கை, AI துறையில் உலகளவில் கடும் போட்டி நிலவுகிறது என்பதையும், அந்தப் போட்டியில் […]

தமிழர்களின் ஆன்மீக மாதமாக கருதப்படும் மார்கழி மாதம் இந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14ஆம் தேதி வரை நீடிக்கிறது. சூரிய பகவான், குருவாகிய வியாழன் ஆளும் தனுசு ராசியில் தன் பயணத்தைத் தொடங்கும் இந்த மாதமே தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் இந்துக்கள் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவதில்லை. சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து, இறைவனின் அருளைப் பெறுவதற்கான வழிபாடுகள், மந்திர ஜபங்கள், […]

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு தரவில்லை. லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தைஇழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு தாமதம் செய்வதும், ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டில் முன்கூட்டியே தொடங்கிய […]

இந்த அதிநவீன டிஜிட்டல் யுகத்தில் அனைத்து சேவைகளும் ஆன்லைனில் கிடைக்கின்றன. நீங்கள் விரும்பும் எந்தச் சேவையையும் உங்கள் மொபைல் மூலம் வீட்டிலிருந்தே செய்துகொள்ளலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வங்கித் துறை முன்னணியில் உள்ளது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் வழங்குகின்றன. கணக்கு தொடங்குவது முதல் பணப் பரிவர்த்தனைகள், கிரெடிட் கார்டு மற்றும் கடன் சேவைகள் வரை அனைத்தும் ஆன்லைனில் வழங்கப்படுகின்றன. இதனால் வங்கிக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய […]

ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்: ஹஜ் – 2026-ம் ஆண்டுக்கான விதிமுறைகளை சவுதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹஜ் பயணத்திற்கான குடியிருப்பு வசதி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு 2026 பிப்ரவரி 1 கடைசி நாளாகும். இதையடுத்து ஹஜ் குழும ஏற்பாட்டாளர்கள், தனியார் சுற்றுலா […]

கல்விக்கடன்களில் வாராக்கடன் 7 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக சரிந்துள்ளது. வித்யாலட்சுமி திட்டம் அமல்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் வழங்கிய நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் மொத்த வாராக்கடன் விகிதம், 2020-21 நிதியாண்டில் 7% ஆக இருந்தது. இது, 2024-25 நிதியாண்டில் 2% ஆகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது வங்கிகளின் கடன் சொத்துத் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. திருத்தப்பட்ட மாதிரி கல்விக்கடன் திட்டத்தின்படி, […]