சிவகாசி அருகே வீட்டின் கேட் இடிந்து விழுந்ததில் இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் கமலிகா, ரிஷிகா என்ற சிறுமிகள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேட் இடிந்து விழுந்ததால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கேட் சுவருடன் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

இந்தியா 2025-ஆம் ஆண்டுக்குள் தனது மின்சார வாகன உள்கட்டமைப்பை பெருமளவில் விரிவுபடுத்துவதன் மூலம் எரிசக்தித் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில், நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான சார்ஜிங் நிலையங்களை அரசாங்கம் அமைத்துள்ளது. மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட விவரங்களின்படி, ஃபேம்-2 திட்டத்தின் கீழ் 8,932 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தங்களின் சொந்த நிதியில் மேலும் 18,500 […]

சிலருக்குச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுக்கும் உணர்வு ஏற்படும். இதைச் சாதாரணப் பசி என்று புறக்கணிக்கக் கூடாது. அதீதப் பசிக்குப் பின்னால் சில தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் மறைந்திருக்கலாம். மருத்துவத் துறையில், இந்த நிலை ‘பாலிஃபேஜியா’ (polyphagia) என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய்: அதீதப் பசிக்கு நீரிழிவு நோயே முக்கியக் காரணமாகும். நமது உடல் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இரத்தத்தில் உள்ள இந்த குளுக்கோஸ் செல்களைச் சென்றடைய […]

உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது, ஆனால் பிரிட்டனில் உள்ள இந்த ஒரு இடத்தில் மட்டும், டிசம்பர் 25-க்கு பதிலாக ஜனவரியில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இந்த தனித்துவமான பாரம்பரியம் ஒரு சிறிய தீவில் காணப்படுகிறது, மேலும் இந்த கொண்டாட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. பிரிட்டனின் ஷெட்லாந்து தீவுகளுக்கு மேற்கே 20 மைல் தொலைவில் அமைந்துள்ள ஃபோலா தீவில் ஜனவரி 6 ஆம் தேதி […]

டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் முடிவடையப் போகிறது, ஜனவரி மாதம் தொடங்கப் போகிறது. ஜனவரி மாதம் மட்டுமல்ல, 2026-ஆம் ஆண்டும் தொடங்கப் போகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எரிவாயு சிலிண்டர் விலை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற விஷயங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியிலும் சில பெரிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரியில் ஏற்படவிருக்கும் மாற்றங்களைப் […]

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஒரு மசூதியில் ஏற்பட்ட பெரும் குண்டுவெடிப்பில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கொடிய குண்டுவெடிப்பு, அலவைட் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சிரியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஹோம்ஸின் வாடி அல்-தஹாப் சுற்றுப்புறத்தில் உள்ள அல்-காத்ரி தெருவில் உள்ள அலி பின் அபி தாலிப் […]

ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளரை, அவரது பிறந்தநாள் பார்ட்டிக்குப் பிறகு வீட்டிற்கு விட்டுச் செல்கிறோம் என்ற பெயரில் காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.. இதையடுத்து அந்த நிறுவனத்தின் சிஇஓ, ஒரு பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.. […]

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக, நாடு முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு தரவுத்தளம் (Organised Crime Network Database – OCND)” என்ற தேசிய அளவிலான முதல் தரவுத்தளத்தை இந்தியா வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தரவுத்தளத்தை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ‘Anti-Terror Conference–2025’ என்ற இரு நாள் மாநாட்டில் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இந்தியாவின் தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய […]

இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் மற்றும் அக்ஷய் கண்ணா நடிப்பில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம், உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த மைல்கல்லை ஒரு சில இந்தியப் படங்கள் மட்டுமே எட்டியுள்ளன. இந்த ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர் படத்தின் வணிகரீதியான வெற்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அதன் பரவலான பிரபலத்தை அடிக்கோடிட்டுக் […]