ஆதார் பெயர் மாற்றத்திற்கான ஆவணமாக இனி பான் கார்டை ஏற்க முடியாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவற்றை ஆவணமாக வழங்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்களில் பான் கார்டு இனி செல்லுபடியாகாது. இந்த மாற்றம் நவம்பர் 2025 முதல் […]

திமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டு மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 கோடி வேலைநாள்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இனி யாருக்கும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை […]

விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் குறைந்த விலையில் உயர்தர விதைகளைப் பெறுவதை உறுதி செய்தல், போலியான, தரமற்ற […]

மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் சிபிஎஸ் ஆசிரியர்களுக்கு மறு நியமன காலத்தில் கடைசியாக பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று நிதித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட உத்தரவில்: தமிழ் நாடு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி பயிற்றுவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக தொடர்புடைய கல்வியாண்டின் […]

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள். ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன. தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் […]