தமிழக வெற்றிக்கழக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. கரூர் சம்பவத்தை தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையை தூண்டும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார்.. அவரின் பதிவில் “ ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்றும், […]

அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், ரோடு ஷோவில் பங்கேற்கும் மக்களின் பாதுகாப்பிற்கு சம்மந்தப்பட்ட அரசியல் கட்சியினரே முழு பொறுப்பு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் ரோடுஷோ பொதுக்கூட்டங்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.. பொதுக்கூட்டங்களை நடத்துவதை முறைப்படுத்தவும், திட்டமிடவும் கண்காணிக்கவும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. 5000 பேருக்கு மேலும் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கக்கூடிய பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், […]

பஞ்சாப் மாகாணத்தின் பைசலாபாத் மாவட்டம் மாலிக்பூரில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பாய்லர் வெடித்ததில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததால், தொழிற்சாலை கட்டிடங்களில் ஒன்று உட்பட அருகிலுள்ள கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் பைசலாபாத் துணை ஆணையர் ராஜா […]

இந்திய அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. தற்போது, ​​அடிப்படை சம்பளத்தில் மாதம் ரூ.15,000 வரை சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே இபிஎஃப் கட்டாய சேர்க்கை பொருந்தும். ரூ.15,000க்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு கட்டாய காப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும். நிறுவனங்களும் அவற்றைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்ப நிலை சம்பளங்கள் கூட இந்த வரம்பைத் தாண்டி வருவதால், இது நகர்ப்புறங்களில் ஓய்வூதிய காப்பீட்டில் இடைவெளியை உருவாக்குகிறது. […]

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து, இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]

நாம் தினமும் என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் நம் ஆயுட்காலத்தையும், உடல் நல தரத்தையும் நிர்ணயிக்கிறது. உடற்பயிற்சி, தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவை முக்கியமானவை என்றாலும், உணவு தேர்வு உடல்நலத்துக்கு இன்னும் அதிகமான தாக்கத்தை உண்டாக்குகிறது. இன்று உங்கள் உணவில் சில சிறிய மாற்றங்களைச் செய்தால், பல ஆண்டுகள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அர்பித் பன்சால், தனது இன்ஸ்டாகிராம் பதிவில், […]

இன்று காலை வங்கதேசத்தில் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 6 பேர் உயிரிழந்தனர்.. மேலும் பலர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது, இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் (உள்ளூர் நேரப்படி) காலை 10.38 மணியளவில் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் […]