துறைமுகப் பணிகளை நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்தல், மற்றும் துறைமுக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவது போன்றவை தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க உதவுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டம் துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கான மாற்றத்தக்க நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.துறைமுகத் தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கிடைக்க இது வகை செய்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிலாளர் நலன் முக்கிய உந்து […]
இந்தியாவில் இயங்கும் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள், ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட உள்ளன. சூரியக் கதிர்வீச்சினால் விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள தகவல் பாதிக்கப்படலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் சுமார் 560 ஏ320 குடும்ப ரக விமானங்களில், 200 முதல் 250 விமானங்கள் வரை உடனடியாக மென்பொருள் […]
இந்தியாவில், வங்கிச் செயல்பாடுகள், அரசு நலத்திட்டங்களைப் பெறுவது மற்றும் அனைத்து நிதிச் சேவைகளுக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாளமாக மாறியுள்ளது. இந்த முக்கியமான ஆவணத்தில் உள்ள விவரங்கள், குறிப்பாக முகவரித் தகவல், சரியாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், பயனாளர்கள் பல முக்கியமான வேலைகளில் தேவையற்ற தாமதங்களையும் தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, உங்கள் ஆதார் முகவரியை எப்போதுமே சரியாக வைத்திருப்பது, KYC சரிபார்ப்புகள், சலுகைகளைக் கோருதல் அல்லது கணக்குத் […]
கடந்த சில நாட்களாக உலக அளவில் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. இந்தப் போக்கு, இந்தியாவிலும் தங்கம் விலை குறைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $46 குறைந்து, தற்போது $4,111-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை இறக்கமே, உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து, இன்று தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்ற […]
இன்று நடைபெறும் ஊரக திறனாய்வுத் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது ஆணையம். ஊரக திறனாய்வுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது, முதன்மை மற்றும் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரக திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த திறனாய்வு தேர்வெழுத தகுதி பெற்றவர்களாவர். இந்த […]
இன்று நடக்கவிருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் ‘டித்வா’ புயல் நாளை அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும். இதன் காரணமாக, டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. […]
இரவு நேரங்களில் போதுமான மற்றும் ஆழ்ந்த தூக்கம் மனநிலை, நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் வேலைத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தூக்கம் நமது உடல் எடை மற்றும் வளர்சிதை மாற்றத்தில் (Metabolism) ஏற்படுத்தும் தாக்கம் பற்றிப் பலரும் அறிவதில்லை. உணவும், உடற்பயிற்சியும்தான் ஆரோக்கியத்தின் தூண்கள் என்றாலும், தூக்கம்தான் நமது பசி உணர்வு, உடலில் ஆற்றல் செலவு, கொழுப்புச் சேமிப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றச் […]
குளிர்காலத்தில் நிலவும் குளிர்ந்த காற்று மற்றும் வறண்ட காலநிலை, ஆண்களின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் அந்தரங்க ஆரோக்கியத்தை எதிர்மறையாகப் பாதிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பாலியல் உந்துதல், இரத்த ஓட்டம், கருவுறுதல் மற்றும் ஹார்மோன் சமநிலை ஆகியவை குளிர்காலத்தில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. இருப்பினும், சில எளிய மற்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட வாழ்க்கை முறைப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம், ஆண்கள் குளிர்காலச் சவால்களைச் சமாளித்து தங்கள் நல்வாழ்வைப் பராமரிக்க […]
10 எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்திய இரயில்வே துறையில் பொதுவாக AC பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிகளுக்கு இதுவரை அதுபோன்ற வசதி இல்லை. இந்த நிலையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் […]
பாமக-வின் தலைவராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தான் தொடர்வார் என்று அறிவிப்பு வெளியிட்ட தேர்தல் ஆணையம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அளித்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. பாமக-வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். இருதரப்பினரும் தங்களுக்கு சாதகமானவர்களை நிர்வாகிகளாக நியமித்து […]

