அமெரிக்க ராணுவ அணிவகுப்பு: பாகிஸ்தான் தளபதிக்கு அழைப்பு..? – வெள்ளி மாளிகை விளக்கம்

Army Chief General Asim Munir

அமெரிக்க ராணுவத்தின் 250வது ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி சையத் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது. ஆங்கில நாளிதழான தி இந்துவில் வெளியான செய்தியின்படி, அந்தச் செய்தி தவறானது என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தினார்.


“250வது நிறுவன தின ராணுவ அணிவகுப்புக்கு எந்த வெளிநாட்டு ராணுவத் தலைவரும் அழைக்கப்படவில்லை” என்று அவர் கூறினார். ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள ஜெனரல் முனீர் ஜூன் 12 ஆம் தேதி வாஷிங்டன், டிசிக்கு வருவார் என்ற கூற்றுகளுக்குப் பிறகு இந்த அறிக்கை வந்துள்ளது. முன்னதாக முனீர் அழைக்கப்பட்டதை, “இராஜதந்திர பின்னடைவு” என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சிதிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு விழாவில் முனீர் கலந்து கொள்வதாக வெளியான தகவல் இந்தியா மட்டும் அல்ல அமெரிக்காவிலும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் டெரெக் கிராஸ்மேன், ஜெனரல் அசிம் முனீர் அழைக்கப்பட்டது தொடர்பான செய்திகளைக் குறிப்பிட்டு விமர்சித்தார்.

இது பாகிஸ்தானின் ராணுவத் தலைமையை நியாயப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு என்று கூறினார். ராணுவ ஆட்சியின் கீழ் ஜனநாயக சீர்குலைவுகளின் பாகிஸ்தானின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, முனீரை அழைப்பது இந்தியாவிற்கு எதிரான ஒரு நபரை அங்கீகரிப்பது போன்றது என்று அவர் குறிப்பிட்டார். இது மூலோபாய பாதுகாப்பு உறவை இந்தியாவுடன் வலுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என விளக்கி இருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி, பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் சூழலைக் கண்டித்தும், ஜனநாயக விதிமுறைகளுக்குத் திரும்ப வலியுறுத்தியும் வாஷிங்டனில் ஒரு போராட்டத்தை அறிவித்திருந்தது. இந்த சூழலில் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Read more: ரயில்வே தொழில்நுட்ப பிரிவில் வேலை.. ரூ.1,40,000 வரை சம்பளம்..!! செம சான்ஸ்.. விட்றாதீங்க

Next Post

’உங்கள் விவரங்களை வழங்குங்கள்; எச்சரிக்கையாக இருங்கள்'!. ஈரானில் வசிக்கும் குடிமக்களுக்கு இந்திய தூதரகம் அறிவுரை!.

Mon Jun 16 , 2025
இந்திய தூதரகம் எச்சரிக்கையாக இருக்கவும், தூதரகத்தின் சமூக ஊடக கணக்குகளை கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தலில் கேட்டுக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் காரணமாக பல இந்திய குடிமக்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர். இதற்கிடையில், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) இந்திய மக்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் […]
israel iran indian embassy 11zon

You May Like