ரயிலில் பயணிகள் மதுபாட்டில்களை கொண்டு செல்லலாம்!… டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி!

ரயில்களில் ஒவ்வொரு பயணியும் 2 சீல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.


டெல்லி மெட்ரோ ரயில் 20 ஆண்டுகளில் நகரத்தின் உயிர்நாடியாக மாறியுள்ளது , போக்குவரத்துக்கு மிகவும் வசதியான வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு நபர் 2 சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்களை ரயிலில் எடுத்து செல்லலாம் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், பயணத்தின்போது பயணிகளின் ஆவணங்களை முறையாக சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதாவது, துவாரகா செக்டார் 21 மற்றும் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியை இணைக்கும் ப்ளூ லைனில் பயணித்த மெட்ரோவில் மதுவை எடுத்துச் செல்ல முடியுமா என்று ட்விட்டர் பயனர் ஒருவர் அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த டிஎம்ஆர்சி, ” ஒரு நபருக்கு டெல்லி மெட்ரோவில் 2 சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் அனுமதிக்கப்படுகின்றன” என்று ரிப்லே செய்துள்ளது. மெட்ரோ வளாகத்தில் மது அருந்துவது இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ வளாகத்தில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பயணி ஒருவர் போதையில் அநாகரீகமாக நடந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

KOKILA

Next Post

வாவ்...! 17 வயது நிரம்பியவர்கள் ஓட்டு ஐடி-க்கு விண்ணப்பிக்கலாம்...! ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும்...!

Sat Jul 1 , 2023
17 வயது நிரம்பியவர்கள் http://eci-citizenservices.nic.in/default.aspx என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டையானது ஸ்பீடு போஸ்ட் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தேவையான ஆவணங்கள்…? முகவரி அடையாளச் சான்றாக விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோரின் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் இணைக்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை, […]
IMG 20230701 053250 176

You May Like