ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி..! தீயை கட்டுப்படுத்தி காயமடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறை!

பாட்னாவில் அடுக்குமாடி ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பீகார் மாநிலம் பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே அடுக்குமாடிகள் அமைந்துள்ளன. அங்குள்ள ஒரு அடுக்குமாடி ஓட்டலில் தீடிரென காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். பின்னர், பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக, காயமடைந்தவர்களை மீட்டு தீயணைப்பு துறை வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 பேர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More: புரட்டிப்போட்ட மழை வெள்ளம் : இயல்பு நிலைக்கு திரும்ப 544 மில்லியன் டாலர்களை இறக்கியது எமிரேட்ஸ்!

shyamala

Next Post

ICICI வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!

Thu Apr 25 , 2024
ஐசிஐசிஐ வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான iMobile Pay-யில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில், வேறு வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பார்க்க முடிவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து எக்ஸ் தளத்தில் குற்றம்சாட்டிய டெக்னோஃபினோவின் நிறுவனர் சுமந்தா மண்டல், “பல பயனர்கள் தங்கள் iMobile Pay செயலி மூலமாக மற்ற வாடிக்கையாளர்களின் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு தகவல்களைப் பார்க்க முடியும் எனப் […]

You May Like