ஜாலி…! 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!

பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து உத்திர பிரதேஷ், பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடுமையான குளிர் காரணமாக, பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளையும் ஜனவரி 14ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.


முன்பு ஜனவரி 8ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில்; ”தற்போது நிலவும் குளிர் அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்பதால், பாட்னா மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி சந்தசேகர் சிங், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 14 வரை மூட உத்தரவிட்டுள்ளார்.

Vignesh

Next Post

மக்களே...! ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை...! டோக்கன் பெற இன்றே கடைசி நாள்...! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...!

Sun Jan 8 , 2023
தமிழர்‌ திருநாளாம்‌ பொங்கல்‌ பண்டிகையை சிறப்பாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌, கொண்டாட வழிவகை செய்யும்‌ வகையில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌, இலங்கை தமிழர்‌ மறு வாழ்வு முகாமில்‌ வசிக்கும்‌ அனைத்து குடும்பத்தினருக்கும்‌ தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும்‌ முழு கரும்பு ஆகியவற்றுடன்‌ ரூ.1000/- ரொக்கப்பணம்‌ வழங்க தமிழக முதல்வர்‌ ஸ்டாலின்‌ உத்தரவிட்டுள்ளார். பொங்கல்‌ பரிசு தொகுப்பு வருகிற நாளை தமிழக […]
money tn goverment

You May Like