பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து பீகார் மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டித்து உத்திர பிரதேஷ், பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்த வெப்பநிலை மற்றும் கடுமையான குளிர் காரணமாக, பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பள்ளிகளையும் ஜனவரி 14ஆம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்பு ஜனவரி 8ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில்; ”தற்போது நிலவும் குளிர் அலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம் என்பதால், பாட்னா மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி சந்தசேகர் சிங், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 14 வரை மூட உத்தரவிட்டுள்ளார்.