பீலே என்று அழைக்கப்படும் பிரபல பிரேசில் கால்பந்து ஜாம்பவான் எட்சன் அரான்டெஸ் டோ நாசிமெண்டோ, தனது 82வது வயதில் காலமானார்.
கால்பந்தாட்டத்தின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படும் பீலே, பிரேசிலிய கிளப் சாண்டோஸ் மற்றும் பிரேசில் தேசிய அணியுடன் விளையாட்டின் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்து, அதிக அளவிலான ரசிகர்களை ஈர்த்தவர். பீலே சிறிது காலமாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.

சமீபத்தில், அவரது புற்றுநோய்க்கான மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக மருத்துவமனையில் தங்கியிருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் இந்த வார தொடக்கத்தில் அறிவித்தனர். பீலே பிரேசிலை கால்பந்தின் உயரத்திற்கு கொண்டு சென்றார் மற்றும் சாவ் பாலோ மாநிலத்தின் தெருக்களில் தொடங்கிய பயணத்தில் தனது விளையாட்டுக்கான உலக அளவில் எடுத்து சென்றார். இவரது மறைவிற்கு ரசிகர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.