’நீங்கள் அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சி’..!! கவனம் ஈர்க்கும் விஜய்யின் அரசியல் பேனர்..!!

விஜய்யின் வாரிசு படத்தை வரவேற்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அரசியல் பேனர் கவனம் ஈர்த்து வருகிறது.


‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (ஜனவரி 11) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கு படக்குழுவினர் மட்டுமின்றி விஜய்யின் ரசிகர்களும் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் பேனர் வைப்பது போஸ்டர் ஒட்டுவது என சுவாரஸ்யமாக செய்து வருகின்றனர். அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 10 திரையரங்குகளில் வாரிசு படம் திரையிடப்பட உள்ளதால் விஜய் ரசிகர்களும், மக்கள் இயக்கத்தினரும் போஸ்டர்களையும் பேனர்களையும் வைத்து வருகின்றனர்.

’நீங்கள் அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சி’..!! கவனம் ஈர்க்கும் விஜய்யின் அரசியல் பேனர்..!!

வாரிசு திரைப்படம் வெளியாகும் காஞ்சிபுரம் பாபு திரையரங்கு வளாகத்தில் பிரம்மாண்டமாக 50 அடி அகலமும் 20 அடி உயரமும் கொண்ட பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் “நீங்கள் அமர்ந்ததால் நாற்காலியும் தோரணையாக… அமர வேண்டிய நாற்காலியில் அமர்ந்தால் மக்கள் மகிழ்ச்சியாக 2026…?” என 2026 சட்டமன்ற தேர்தலை சூசகமாக குறிப்பிட்டு வாசகம் இடம்பெற்றுள்ளது.

CHELLA

Next Post

மாணவர்களுக்கான மதிய உணவில் கிடந்த பாம்பு..!! 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!! பெரும் பரபரப்பு

Tue Jan 10 , 2023
மதிய உணவுக்கான பருப்பு நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் பாம்பு ஒன்றைக் கண்டதாகப் பள்ளி ஊழியர் ஒருவர் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, `பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் சிக்கன், பழங்கள் வழங்கப்படும்’ என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்க […]
மாணவர்களுக்கான மதிய உணவில் கிடந்த பாம்பு..!! 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!! பெரும் பரபரப்பு

You May Like