மக்களே உஷார்..!! கொளுத்தும் கோடை வெயில்..!! அடுத்த 2 நாட்களுக்கு உஷாரா இருங்க..!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று ஏப்ரல் 18ஆம் தேதி முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரையில் உயரக்கூடும் என்றும், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை இருக்கக்கூடும் என்றும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல், படிப்படியாக அதிகபட்ச வெப்பநிலை குறையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தைகளையும், முதியவர்களையும் தனியே வெளியில் அனுப்புவதைத் தவிர்க்கவும். வெயில் காலங்களில் பருத்தியினால் ஆன ஆடைகளை அணிய வேண்டும். உங்கள் குழந்தைகளும் போதுமான அளவு தண்ணீர் அருந்துவதை மறக்காமல் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : கோடைகாலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடுறீங்களா..? இரட்டை குழந்தைகள் திடீர் மரணம்..!! தாய்க்கு தீவிர சிகிச்சை..!!

Chella

Next Post

பெற்றோர்கள் கவனத்திற்கு!!செர்லாக்கில் அடிக்டிவ் சுகர்..! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Thu Apr 18 , 2024
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஊட்டச்சத்துப் பொருளான செர்லாக்கில் அடிக்கடி உண்ண வைக்கும் அடிக்டிவ் சுகர் எனப்படும் சுவைக்கு அடிமையாகும் உப்புக்கள் சேர்க்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.  பப்ளிக் ஐ எனும் அமைப்பு நடத்திய ஆய்வின் அறிக்கை முடிவுகள் தற்போது வெளியாகின. அதன்படி, உலகின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, பல நாடுகளில் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேனைச் […]

You May Like