கடவுளுக்கு காணிக்கையாக பொருட்களை வழங்குவதும் நேர்த்தி கடனாக கொடுப்பதும் ஒரு சம்பிரதாயமே. நம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கடவுளுக்கு படையலாக சோறு கறி மற்றும் சாராயம் படைக்கப்படுவதைப் போல குஜராத்தை சார்ந்த ஒரு கடவுளுக்கு அந்த மக்கள் சிகரெட்டை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அதவாளின்ஸ் என்ற பகுதியில் ஆதர்ஷ் சொசைட்டி என்ற இடத்தில் வஞ்சரா பூத் மாமா என்ற சிறிய கோவில் உள்ளது.
இந்தக் கோயிலில் இருக்கும் சாமிக்கு தான் சிகரெட் காணிக்கையாகவும் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஒரு ஆன்மீக குழு ஒன்று வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த ஆன்மீகக் குழுவைச் சார்ந்த ஒருவர் இறக்கவே அவரை அடக்கம் செய்து சமாதி கட்டப்பட்டு மக்கள் அவரை வழிபட தொடங்கினர் இங்கு சிகரெட் தவிர மகாஸ் என்ற இனிப்பும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சாமியை வழிபடுவதால் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.