இந்தியாவில் உள்ள கோவிலுக்கு சிகரெட் தான் காணிக்கை!சிகரெட் பாபாவின் அதிசய கோவில்!

கடவுளுக்கு காணிக்கையாக பொருட்களை வழங்குவதும் நேர்த்தி கடனாக கொடுப்பதும் ஒரு சம்பிரதாயமே. நம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கடவுளுக்கு படையலாக சோறு கறி மற்றும் சாராயம் படைக்கப்படுவதைப் போல குஜராத்தை சார்ந்த ஒரு கடவுளுக்கு அந்த மக்கள் சிகரெட்டை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அதவாளின்ஸ் என்ற பகுதியில் ஆதர்ஷ் சொசைட்டி என்ற இடத்தில் வஞ்சரா பூத் மாமா என்ற சிறிய கோவில் உள்ளது.


இந்தக் கோயிலில் இருக்கும் சாமிக்கு தான் சிகரெட் காணிக்கையாகவும் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் ஒரு ஆன்மீக குழு ஒன்று வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த ஆன்மீகக் குழுவைச் சார்ந்த ஒருவர் இறக்கவே அவரை அடக்கம் செய்து சமாதி கட்டப்பட்டு மக்கள் அவரை வழிபட தொடங்கினர் இங்கு சிகரெட் தவிர மகாஸ் என்ற இனிப்பும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சாமியை வழிபடுவதால் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது.

1newsnationuser5

Next Post

ஓசூர் அருகே பயங்கர விபத்து! சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுமி பரிதாபமாக பலி - 2 பேர் படுகாயம்!

Wed Mar 8 , 2023
ஓசூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு வயது குழந்தை பரிதாபமாக இருந்துள்ளது. அந்தக் குழந்தையின் பெற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கொத்தம்பள்ளியைச் சார்ந்தவர் நாகராஜ். 30 வயதான இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் கிருத்திகா என்ற மகள் இருந்தார். இவர் சம்பவம் நடந்த தினத்தன்று மனைவி மற்றும் தனது மகளுடன் ராயக்கோட்டை என்ற பகுதிக்கு சென்று இருக்கிறார். அப்போது […]
IMG 20230308 WA0077

You May Like