மக்களே..!! இன்றும், நாளையும் சம்பவம் இருக்கு..!! பாதுகாப்பா இருங்க..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 08ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இந்நிலையில் இன்றும், நாளையும், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பகல்நேர வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் வெப்ப அலை வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Read More : கச்சத்தீவு விவகாரம்..!! முதன்முறையாக கருத்து தெரிவித்த இலங்கை..!! யார் காரணம்..?

Chella

Next Post

பாடையில் படுக்க வைத்து இப்படி ஒரு நேர்த்திக்கடனா..? சேலத்தில் நடந்த விநோதம்..!!

Sat Apr 6 , 2024
சேலம் அருகே உள்ள கோயில் திருவிழாவில் ஒருவரை பாடையில் பிணமாக படுக்க வைத்து நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. கோயில்களில் வேண்டுதலுக்காக நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்வது வழக்கம். பல வித்தியாசமான நேர்த்திகடன்களை பக்தர்கள் செய்து வருகின்றனர். அந்த வகையில், சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டியில் பழமை வாய்ந்த மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் வினோத வழிபாடாக பக்தர் ஒருவர் பாடையில் பிணமாக படுக்கவைத்து நூதனமுறையில் […]

You May Like