ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. திருவிழா நாட்களில் மக்கள் ஒரே இடத்தில் அதிகம் கூடுவதும், இதில் குறிப்பாக சிறுவர்களுடன் குடும்பம் குடும்பமாக வந்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர் . பல மாவட்டங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கூறி காவல்துறையினர் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை.
இந்நிலையில் கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற தாக்கல் செய்யப்பட்டது. ஆடல் பாடல், கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்வுகளுக்கு காவல் நிலையத்தில் மனு அளித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏழு நாளுக்குள் அனுமதி வழங்காத பட்சத்தில் அனுமதி அளித்ததாகவே கருதப்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.