வேலுார் மாவட்ட பகுதியில் உள்ள காட்பாடி மணவாளமோடில் கட்டட தொழிலாளி வல்லரசு (45) எனபவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் பாழடைந்த தூர்வாராத நிலையில் 400 அடி ஆழ கிணறு இருந்துள்ளது. அதில் நாய் குட்டி ஒன்று நேற்று முன்தினத்தில் மாலை நேரத்தில் தவறி விழுந்துள்ளது.
இதனை கண்ட வல்லரசு முதலில் கயிற்றில் வாளியினை கட்டி நாயை அதன்மூலம் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் நிலை தடுமாறி அவரும் கிணற்றில் விழுந்துள்ளார். இதன் பின்னர் அவரும் நீரிலே மூழ்கி இறந்துவிட்டார்.
இதனை தொடர்ந்து காட்பாடியில் இருக்கும் தீயணைக்கும் துறையினர் பல மணி நேரம் போராடி கிணற்றிலிருக்கும் நீரினை மோட்டார் வைத்து வெளியேற்றிய பின்னர் வல்லரசுவின் உடலை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.