#வேலூர்: நாய் குட்டியை காப்பாற்ற முயன்ற நபர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலி..!

வேலுார் மாவட்ட பகுதியில் உள்ள காட்பாடி மணவாளமோடில் கட்டட தொழிலாளி வல்லரசு (45) எனபவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் பாழடைந்த தூர்வாராத நிலையில் 400 அடி ஆழ கிணறு இருந்துள்ளது. அதில் நாய் குட்டி ஒன்று நேற்று முன்தினத்தில் மாலை நேரத்தில் தவறி விழுந்துள்ளது.


இதனை கண்ட வல்லரசு முதலில் கயிற்றில் வாளியினை கட்டி நாயை அதன்மூலம் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ஆனால் நிலை தடுமாறி அவரும் கிணற்றில் விழுந்துள்ளார். இதன் பின்னர் அவரும் நீரிலே மூழ்கி இறந்துவிட்டார். 

இதனை தொடர்ந்து காட்பாடியில் இருக்கும் தீயணைக்கும் துறையினர் பல மணி நேரம் போராடி கிணற்றிலிருக்கும் நீரினை மோட்டார் வைத்து வெளியேற்றிய பின்னர் வல்லரசுவின் உடலை மீட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

அதிரடியாக உயர்ந்தது ஆவின் நெய் விலை..!! அமலுக்கு வந்ததால் கடும் அதிர்ச்சி..!!

Fri Dec 16 , 2022
ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்ட நிலையில், புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 9 மாதங்களில் மூன்றாவது முறையாக விலையேற்றப்பட்டுள்ளது சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லிட்டர் ப்ரீமியம் நெய் ரூ.630-இல் இருந்து ரூ.680 ஆகவும், அரை லிட்டர் நெய் ரூ.340இல் […]
அதிரடியாக உயர்ந்தது ஆவின் நெய் விலை..!! அமலுக்கு வந்ததால் கடும் அதிர்ச்சி..!!

You May Like