சுந்தர் பிச்சை, நடிகர் சல்மான் கான் உட்பட 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்பனைக்கு வந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உட்பட ட்விட்டரில் கிட்டத்தட்ட 40 கோடி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர் ஒருவர் திருடியதாக சமீபத்திய தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இஸ்ரேலிய சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்சன் ராக்கின் வெளியிட்ட அறிவிப்பில், டார்க் வெப்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தரவுகளில் 40 கோடி ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல், பயனர் பெயர், பின்தொடர்பவர்கள் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை அடங்கும் என்று கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் 400 மில்லியன் தனிப்பட்ட ட்விட்டர் பயனர்களின் தரவை விற்பனை செய்ததாகவும், அது ஒரு பாதிப்பால் அகற்றப்பட்டது, இந்தத் தரவு முற்றிலும் தனிப்பட்டது, ”என்று ஹேக்கர் தங்களது பதிவில் எழுதியதாகக் கூறப்படுகிறது.
மேலும் குறிப்பிடத்தக்க வகையில், ஹேக்கர்கள் கோடிக்கணக்கான ட்விட்டர் பயனர்களின் தரவை அணுகுவது இது முதல் முறை அல்ல, இது போன்ற தகவல் திருட்டு நிச்சயம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில மாதங்களுக்கு முன்பு, 5.4 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் தரவு கசிந்தது. ஐரிஷ் தரவு பாதுகாப்பு ஆணையம் சமீபத்தில் கடந்த கால தரவு கசிவு குறித்த விசாரணை நடத்தப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.