பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி..!! ’இனி கேன்களில் விற்பனை செய்ய தடை’..!!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு, பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உடனே இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், காவல்துறை சார்பில் இதுபோன்று சம்பவங்களில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலி..!! ’இனி கேன்களில் விற்பனை செய்ய தடை’..!!

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் ஏதும் நடைபெறாமல் உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதனை தடுக்கும் வகையில், விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காவல்துறை சார்பாக அறிவிப்பு பலகை ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் போட வேண்டும் என்றும் கேன்களில் சில்லறை வியாபாரம் செய்யக்கூடாது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவின் பேரில் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர் சார்பாக அறிவிப்பு பலகை என்பது ஒட்டப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

நான் அரசியலில் இருந்து விலக தயார்..! நீங்கள் தயாரா? அமைச்சர் பிடிஆருக்கு சவால் விட்ட செல்லூர் ராஜூ..!!

Sun Sep 25 , 2022
கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயார் என செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். வரும் 29ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் […]
Sellur Raju

You May Like