மனைவியின் அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக் பைப்.. கணவரின் கொடூர செயல்..!

மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள முலுண்ட் பகுதியில் மதுபோதையிலிருந்த 41 வயது நபர் தனது மனைவியை கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும் , பெற்ற குழந்தைகள் மத்தியில் மனைவியின் பிறப்புருப்பில் பிளாஸ்டிக் பொருளை வைத்து அடைத்து துன்புறுத்திய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.


அதன் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். அப்போது எம்.டி என்ற தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல் நிலைய போலீசார், அந்த பெண்ணிடம் விசாரணை செய்தனர். காவல் துறையினர் அளித்த தகவலின் படி ” கணவர் பலமுறை குடித்துவிட்டு வந்து கொடூரமான முறையில் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 

சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவில் , மதுபோதையிலிருந்த நபர் பெண்ணின் ஆடைகளை கிழித்து, அதன் பின்னர் அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக் போன்ற பொருளை வைத்து அடைத்ததுள்ளார் என அந்த பெண் வேதனையுடன் கூறியுள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறியதாவது “பெண்ணின் அந்தரங்கப் பகுதியிலிருந்து இருந்த பிளாஸ்டிக் பைப் ஒன்று நீக்கப்பட்டுள்ளது . அத்துடன் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது” என்றனர். இதனையடுத்து , அவரின் கணவர் மீது பிரிவுகள் 326, 354 பி, 354, 376, 377 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

Wed Dec 7 , 2022
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்து கொண்டார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அப்போது ஓபிஎஸ்யின் வலதுகரமாக இருந்த கோவை செல்வராஜ் எடப்பாடி அணியினருக்கு பதிலடி கொடுத்து கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட […]
ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்..!! பரபரக்கும் அரசியல் களம்..!!

You May Like