புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திரமோடி, இதுகுறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருப்பதால் நம்முடைய மனம் பெருமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்கிறது. கனவுகளை நினைவாக்கட்டும் இந்த புதிய கட்டிடம் நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதோடு மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பான புகைப்படங்களையும் பிரதமர் இதில் பகிர்ந்து இருக்கிறார்.