விவசாயிகளுக்கு குட் நியூஸ்…! முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலி அறிமுகம்…!

விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவளிக்கும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவுத் திட்டத்தின் கீழ், முக அங்கீகார அம்சத்துடன் கூடிய பிரதமரின் வேளாண் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் அல்லது கைரேகையில்லாமல், மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை பூர்த்தி செய்ய முடியும்.


அத்துடன் மற்ற நூறு விவசாயிகளுக்கும் அவர் உதவமுடியும். இதன் மூலம் மாநில அரசு அதிகாரி ஒருவர், 500 விவசாயிகளின் மின்னணு வாயிலான வாடிக்கையாளர் விவரங்களை சரிபார்க்க முடியும்.

வருவாய் ஆதரவுத் திட்டத்தின் மூலம் சுமார் 8.5 கோடி விவசாயிகளுக்கு தவணை முறையில் நிதியளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இடைத்தரகர்கள் தலையீடு இன்றி விவசாயிகளுக்கு மத்திய அரசு நிதியளிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் பயன் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Vignesh

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி...!

Fri Jun 23 , 2023
அதிமுக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் நெஞ்சு வலி காரணமாக நேற்று இரவு 8.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய சிகிச்சை சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு விரிவான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டரான இவர், இதற்கு முன் 2001 மற்றும் 2006 தேர்தல்களில் திண்டிவனம் தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் . முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2003 […]
cv shanmugam

You May Like