வரலாற்றை தெரிந்து கொள்வோம்; தேசிய கொடியை டி.பி-யில் பயன்படுத்துவோம்: பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ஆம் வருடம் பிரதமராக பொறுப்பேற்றார். அது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலமாக நம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு தலைப்புகள் குறித்து பேசினார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களின் காட்சி படமாக தேசிய கொடியை (DP) பயன்படுத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்த பிங்கிலி வெங்கையாவின் பிறந்த தினம் ஆகஸ்ட் இரண்டாம் தேதியை நினைவு கூறும் விதமாகவும், நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டும் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பேசிய பிரதமர். “சுதந்திர தினத்தை முன்னிட்டு 24 மாநிலங்களில் இருக்கும் 75 முக்கிய ரெயில் நிலையங்களை அலங்கரிக்கும் பணி நடந்து வருகிறது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய ரயில்வேயின் வரலாற்றுப் பங்கு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம்’ என தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

ஒரு பாட்டில் வாங்கினால் 2 பாட்டில் ஃப்ரீ; ஆடி தள்ளுபடியில் அள்ளிவிடும் மதுக்கடைகள்: குஷியில் குடி பிரியர்கள்..!

Sun Jul 31 , 2022
டெல்லியில் உள்ள மதுக்கடைகள் குடிகாரர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதனால் மது கடைகளை நோக்கி குடிகாரர்கள் படையெடுத்தனர். டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் இருக்கின்றன. இந்நிலையில் மது கடைகளுக்கான லைசென்சு வாங்க புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்கான கடைசி தேதி இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை, 1-ஆம் தேதி முதல் டெல்லியில் […]

You May Like