பீஹார் போலீஸின் அநாகரிகமான நடத்தையை காட்டும் இன்னொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சமீபத்திய வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கூட்டரால் இடித்து, இழுத்துச் செல்கிறார்.
பட்னாவின் மேரீன் டிரைவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த பெண் போலீஸைக் நிறுத்த முயன்றும், அவர் ஸ்கூட்டரை முன்னே தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாக தெரிகிறது. வீடியோவின்படி, அந்தப் பெண் தானே இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்த, போலீஸ் அதிகாரி அவரை நடந்து செல்லும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அந்த பெண் தவறான வழியில் (wrong side) நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறின் போது இந்த சம்பவம் நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. பெண் தனது ஸ்கூட்டருக்கு பிடித்தபடியே சுமார் 20 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டு, பின்னர் வழுக்கி விழுந்ததால் காயமடைந்தார். மேலும், போலீஸ்காரர் ஸ்கூட்டரை தனது வயிற்றில் மோதச் செய்தார் என்று அப்பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், ரூ.12,000 ரூபாய் நிலுவை சலானை செலுத்தாததன் காரணமாக போலீஸ் ஸ்கூட்டரை பறிமுதல் செய்ய முயன்றதால் நிலைமை கடுமையானதாக மாறியது என்று கூறப்படுகிறது. பின்னர், அந்த அபராதத்தை செலுத்துவதாக அதிகாரிகளுக்கு உறுதியளித்ததால், அவர் ஸ்கூட்டருடன் விடுவிக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
உத்கர்ஷ் மிஷ்ரா என்ற பயனர் சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பகிர்ந்த பிறகு. அந்த வீடியோக்களில் போலீஸ் அதிகாரிகள் ஒரு இரு சக்கர வாகன ஓட்டியின் ஹெல்மெட்டை பலவந்தமாக இழுத்து, மிரட்டி, “ஹெல்மெட்டை திற” என்று கட்டளையிடும் காட்சிகள் உள்ளன.
இந்த பதிவுகள் வேகமாக வைரலாகியதால், பீகார் போலீஸ் X-இல் பதட்டத்துடன் பதில் அளித்து, பட்டனா போக்குவரத்து துறையை டாக் செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டது. இருப்பினும், இதுவரை எந்த உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
வைரலான வீடியோ
உத்கர்ஷ் மிஷ்ரா தனது பதிவில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும் “ என் நண்பரை பீகார் போலீஸ்காரர்கள் காரணமே இல்லாமல் திட்டியும் அடித்தும் இருக்கிறார்கள். இது அதிகார துஷ்பிரயோஜனம். உடனடி நடவடிக்கை மற்றும் இடைநீக்கம் தேவை.” என்று பதிவிட்டிருந்தார்..
அந்த வீடியோவில் :பீஹார் போலீஸின் தொழில்முறை இல்லாத நடத்தையை காட்டும் இன்னொரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய யூத் காங்கிரஸ் பகிர்ந்த சமீபத்திய வீடியோவில், ஒரு கர்ப்பிணி பெண்ணை போலீஸ் அதிகாரி ஒருவர் ஸ்கூட்டரில் இழுத்துச் செல்கிறார்.
பட்னாவின் மேரீன் டிரைவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், அந்த பெண் போலீஸைக் நிறுத்த முயன்றும், அவர் ஸ்கூட்டரை முன்னே தள்ளிச் செல்லும் காட்சி தெளிவாக தெரிகிறது. வீடியோவின்படி, அந்தப் பெண் தானே இரு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்த, போலீஸ் அதிகாரி அவரை நடந்து செல்லும்படி கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும் இந்த வீடியோவை பதிவிட்ட பின்னர் தனக்கு பல்வேறு மிரட்டல் அழைப்புகள் வந்ததாக வீடியோவை பகிர்ந்த நபர் கூறியுள்ளார்.. வீடியோவை நீக்கவில்லை எனில் கைது செய்வோம் என்று காவல்துறையினர் மிரட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்..



