பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் கூடுதலாக 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சென்னையை தவிர்த்து பிற ஊர்களில் இருந்து 3 நாட்களுக்கு 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. ஜனவரி 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் மொத்தம் 5 பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.