பொன்னியின் செல்வன் வசூல்..!! லைகா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு..!!

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


சென்னையில் லைகா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தியாகராய நகர், அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். ஏற்கனவே, பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் சரியாக ஓடவில்லை என்றும் வசூலிலும் சற்று தோல்வியை சந்தித்துள்ளது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான நாளில் இருந்து உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்திருந்தது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில், 300 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CHELLA

Next Post

வழிபாட்டுத்தலத்தில் மது அருந்திய பெண்….! ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் பஞ்சாபில் பயங்கரம்…..!

Tue May 16 , 2023
பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியில் இருக்கின்ற அர்பன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி பர்மீந்தர் கவுர். சீக்கியரான இவர் அருகே உள்ள துக்நீர்வான் சஹிப் குருத்வாரா என்ற அவர்களுடைய மத வழிபாட்டு தளத்திற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில் தான் அந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை குருத்வாரா வளாகத்தில் உள்ள சரோவர் என்ற சொல்லப்படும் புனித நீர் இருக்கும் பகுதியில் […]
Punjab murder

You May Like