பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்ந்த ஹவுஸ் ஃபுல் காட்சிகளால் திரை அரங்கங்கள் நிரம்பி வழிவதால் தமிழ் திரைப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகின்றன.
லைகா தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து 4 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கு வசூலில் சாதனை செய்துள்ளது. என கூறப்பட்டு வருகின்றது.
அத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மீதுள்ள ஆர்வத்தால் மக்கள் நாளுக்கு நாள் அதிக அளவில் படத்தை காண செல்கின்றனர். தீபாவளி வரை திரைப்படத்தை திரையிடுவதற்கு தயாரிப்புநிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த வாரம் வெளியாக இருந்த திரைப்படங்கள் தேதி தள்ளிப்போகின்றது.
குறிப்பாக , சுந்தர்.சி இயக்கத்தில் ஜெய் , ஜீவா உள்ளிட்டோர் நடித்தள்ள காஃபி வித் காதல் திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் இதற்கான புரோமோஷன் வேலைகளும் மும்முரமாக நடைபெற்றன. இதனால் அதிக திரை அரங்குகளில் வெளியிட திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர் . சி திட்டமிட்டிருந்தார். ஆனால் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்பதால் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.