பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியடைந்ததை ஒட்டி நடத்தப்பட்ட வெற்றி விழா கொண்டாட்டத்தில் அடிதடி ரகளை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது. திரைப்படம் வெளியான ஒரு மாதத்திற்கு மேலாகின்றது. தற்போது வரை திரையரங்குகளில் வசூல் குவிகின்றது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த வாரம் வெற்றி விழா நடத்தப்பட்டது. இதில் நடித்த நட்சத்திரங்கள் அந்த படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர்மணி ரத்னம், நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரபலங்கள் சூழ்ந்திருந்த அந்த அரங்கம் பின்னர் களேபரமாக மாறியது. இந்த தகவலை பத்திரிகையாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி, இதில் கலந்து கொண்ட மணிரத்தினத்தின் பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதை பார்த்தவர்கள் அந்த நபருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சனை அதிகமானது. அவரை அடித்து உதைத்து பின்னர் அங்கிருந்து துரத்தி விட்டனர். இது அங்கு வந்திருந்த பிரபலங்களை முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் இந்த செய்தியை அறிந்து மிகவும் வருத்தடைந்ததார் எனவும் தெரிவித்துள்ளார். வெற்றி கொண்டாட்டம் சண்டையில் முடிந்ததால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாம்.