சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் 26.06.2025 அன்று காலை 11.00 மணியளவில் அஞ்சல் குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சல்துறையின் பொருள்கள் மற்றும் சேவைகள் தொடர்பான குறைகளை கோட்ட அளவிலான குறைதீர்ப்பு மன்றத் தலைவர் விசாரிப்பார். இந்தக் கோட்டத்திற்கு உட்பட்ட தங்கள் புகார்களை வாடிக்கையாளர்கள் சென்னை நகர மத்திய கோட்ட முதுநிலை கண்காணிப்பாளருக்கு 18.06.2025 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பலாம்.
பதிவு தபால் (பதிவு செய்யப்பட்ட தேதி), பார்சல், காப்பீடு, மணியார்டர் தொடர்பான புகார்களை அனுப்புநர் மற்றும் பெறுநர் முகவரிகள் போன்ற தகவல்களுடனும், சேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் அல்லது ஊரக அஞ்சலக காப்பீட்டுத் திட்டங்கள் தொடர்பான புகார்களில், கணக்கு எண், பாலிசி எண் ஆகியவற்றுடன் புகார்தாரரின் முழு முகவரி, அஞ்சல் நிலையப் பெயர் போன்ற தகவல்களுடனும் அனுப்ப வேண்டும். கீழ்நிலை அஞ்சலகங்களில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு மனநிறைவு தரும்வகையில் தீர்வு காணப்படாத புகார்கள் மட்டுமே, மண்டல அளவிலான குறைதீர்வு முகாமில் எடுத்துக்கொள்ளப்படும். புதிய புகார்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
புகார்களை சாதாரண தபாலிலோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்ப வேண்டும். புகார்கள் அடங்கிய உறையின் மேற்பகுதியில் மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு என குறிப்பிட வேண்டும். அஞ்சலகங்கள் தொடர்புடைய புகார்களை அவற்றுக்கு தபால் மூலம் அல்லது dochennaicitycentral@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: மகிழ்ச்சி…! காவல்துறையில் பதவி உயர்வுக்கான பணி கால வரம்பு குறைப்பு…!