அஞ்சல் குறை தீர்க்கும் நாள் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
அஞ்சல்துறையின் வடகோட்ட முதுநிலை கண்காணிப்பாளரால் 23-ம் தேதி அன்று பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் குறை தீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. சென்னை வட கோட்டத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறை சேவை சம்பந்தமான தங்களது குறைகளைக் கடிதம் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் dochennainorth.tn@indiapost.gov.in மூலமாகவோ 20.12.2022 மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்துக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
நான்காவது மாடி, எத்திராஜ் சாலை, எழும்பூர், சென்னை 600 008 உள்ள அலுவலகத்தில் இந்த குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அஞ்சல் துறை சம்பந்தமாக தங்களுக்கு ஏதாவது குறைகள் இருந்தால் இந்த முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கிறோம்.