சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். செயலக காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், விஜிபி சீனிவாசநகர், விஜிபி சரவணாநகர், காயத்ரிநகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தேஞ்சேரி, கணபதி நகர், ஞானா நகர், பாரதிதாசன் நகர், சக்திநகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கம், கௌரிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.
மேலும் சந்தோஷபுரம், ராக்கி கார்டன், ராஜாஜி கார்டன் நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய்நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தரகேஸ்வரி நகர், கே.வி.சி.நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர்,அலமேலுபுரம், கண்ணன்நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீ தேவி நகர் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.