“நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள்”..!! நடிகர் விஷால் தடாலடி..!!

நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதியாக மாறுவோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய நடிகர் விஷால், தற்போது ரத்னம் படத்தின் புரோமோஷனுக்காக பல ஊர்களுக்கு பயணித்து வருகிறார். அந்த வகையில், திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் விஷால் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய் மட்டுமல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நான் அரசியலுக்கு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால், நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதியாக மாறுவோம். ஓட்டுக்கு கொடுத்த பணம் மக்களுடைய பணம் தான். ஒரு MLA-வுக்கு மாத சம்பளம் வெறும் இரண்டு லட்சம் ரூபாய் என இருக்கும்போது, அவர்களால் எப்படி ஓட்டுக்கு இவ்வளவு பணம் கொடுக்க முடிகிறது?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், “இந்தாண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று கூறிய விஷால், நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து நடிகர் சங்கங்களில் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

Chella

Next Post

மணப்பெண்ணை மிளகாய் பொடி தூவி கடத்த முயன்ற பெற்றோர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Tue Apr 23 , 2024
மணமேடையில் இருந்து மணமகளை மிளகாய் பொடி தூவி குடும்பத்தினர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக திருமணம் என்றாலே இரு வீட்டாருக்கும் பரபரப்பான நிலை தான் இருக்கும். திருமணத்திற்கு வருபவர்களை பார்த்துக் கொள்வதில் இருந்து திருமண ஏற்பாடுகள் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஆந்திராவில் பெற்றோரே மணப்பெண் மீது மிளகாய் பொடி தூவி கடத்த முயன்றுள்ளனர். ஆந்திர மாநிலம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சினேகா மற்றும் பட்டின […]

You May Like