”டோட்டலா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம்..” பிரேமலதா பரபரப்பு பேச்சு..

Premalatha Eps 2025

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


இதற்கிடையெ பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சமீபத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்; அதில் பாஜகவும் பங்கு வகிக்கும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து செய்துயாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், “கூட்டணி ஆட்சி என்பது வரவேற்கத்தக்கது. இது தே.மு.தி.க.வின் அடிப்படை நிலைப்பாடாகவே இருக்கிறது,” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தேமுதிக பல முறை பல தேர்தல்களில் தனியாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றை கொண்ட ஒரே கட்சி தேமுதிக தான். அதன் பிறகு கூட்டணிகள் அமைந்தது. மக்கள் நலனுக்காக கூட்டணி ஆட்சியை வரவேற்கிறேன். கூட்டணி ஆட்சி அமைந்தால் தான் நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லது என்றார்.

அதிமுக தனிப் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் கருத்தை மேற்கோள் காட்டி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அது அவரின் கருத்து.. அவரின் கட்சி மேல் அவருக்கு உள்ள நம்பிக்கையின் வெளிபாடு அது.. இதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அவரிடமே கேளுங்கள். கூட்டணி ஆட்சி அமையும் என்பது அமித்ஷாவின் கருத்து.. அதே போல் தனிப் பெரும்பான்மை ஓட்டுக்களை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை.. ஆனால் கடைசியில் எஜமானர்கள் மக்கள் தான். பொறுத்திருந்து பார்போம்.

Read more: கர்நாடகாவின் புதிய முதலமைச்சர் இவர் தான்! சித்தராமையா நீக்கம்? காங்கிரஸ் முக்கிய முடிவு..

Next Post

இதுக்கெல்லாம் பதில் சொல்லுங்கள் முதலமைச்சரே? சிவகங்கை லாக் அப் மரணம்.. பாஜக தலைவர் எழுப்பிய 9 கேள்விகள்..

Mon Jun 30 , 2025
சிவகங்கை லாக் அப் மரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் […]
FotoJet 5 1

You May Like